பாரதத்துடனான தபால் சேவையை நிறுத்திய பாகிஸ்தான்!

Published:

IMG 20191024 WA0000 - 2026

பாரதத்தோடான தபால் சேவையை நிறுத்தி விட்டது பாகிஸ்தான்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு தனி அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதிலிருந்து பாகிஸ்தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் தடாலடி முடிவுகளை எடுத்துவருகிறது . மேலும் எல்லையில் கொந்தளிப்பு நிலையை ஏற்படுத்தி வருகிறது.

இந்த தருணத்தில் இந்தியாவுக்கு தபால் சேவையை நிறுத்தி விட்டது பாகிஸ்தான். சுமார் இரண்டு மாதங்களாக பாகிஸ்தானிலிருந்து தபால் சேவை நின்றுவிட்டது.

இந்த விஷயத்தை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். பாகிஸ்தான் செய்தது தவறு என்றார்.

எந்த ஒரு முன்னெச்சரிக்கையும் இன்றி இவ்வாறு நடந்து கொண்டது தவறு என்று ட்வீட் செய்தார் .

சர்வதேச தபால் சேவைகள் உலக தபால் யூனியன் விதிமுறையின் கீழ் பணியாற்றி வருகின்றன. பாகிஸ்தானின் இந்த செயல் அதற்கு விரோதமாக உள்ளது. பாகிஸ்தானின் தீர்மானத்திற்கு ஏற்றார்போல் தான் இந்திய தபால் துறையும் எதிர்வினையாற்றும் என்றார் ரவிசங்கர் பிரசாத்.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img