பீட்டாவைத் தடை செய்யவேண்டும்: தமிழிசை சௌந்தர்ராஜன்

திருச்சி:

பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக பாஜக மாநில நிர்வாகிகள் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசியபோது,

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக் கோரி போராட்டம் நடத்தி வரும் இளைஞர்களின் உணர்வுக்கு தலை வணங்குகிறோம். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தும்வரை பாஜக ஓயாது. இதுகுறித்து கட்சியின் பாஜக தலைவர் அமித்ஷாவிடம் ஆலோசித்து வருகிறோம். வரும் 20-ம் தேதி (நாளை) பாஜக தமிழக நிர்வாகிகள், ஜல்லிக்கட்டு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் டெல்லிக்குச் சென்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சரையும், கட்சியின் முக்கிய தலைவர்களையும் சந்தித்து ஜல்லிக்கட்டு தொடர்பாக பேச உள்ளோம்.

மாணவர்களின் போராட்டம் குறித்து பிரதமர் மோடியும், மத்திய அரசும் மவுனம் காப்பதாகவும், தமிழர் நலனில் மத்திய அரசுக்கு அக்கறையில்லை என்றும் குற்றம் சாட்டுவது தவறு. இப்போராட்டம் தொடர்பாக டெல்லியில் இருந்து அடிக்கடி தொடர்புகொண்டு விசாரித்துக்கொண்டு உள்ளனர். விரைவில் அவர்களிடம் இருந்து நல்ல செய்தி வரும் என்ற நம்பிக்கை உள்ளது. பீட்டா அமைப்பை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்பதை தமிழக பாஜகவும் வலியுறுத்துகிறது.

ஜல்லிக்கட்டுக்காக அவசரச் சட்டம் கொண்டு வந்தால், அதில் கையெழுத்து போடக்கூடாது என குடியரசுத் தலைவரிடம் பீட்டா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அதேபோல, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தினால் அரசைக் கலைக்க வேண்டும் எனவும் அந்த அமைப்பினர் கூறுகின்றனர். எனவே, பீட்டா அமைப்பின் உள்நோக்கம், நடவடிக்கைகள், பின்னணி போன்றவற்றை ஆராய வேண்டும் என மத்திய அரசுக்கு, நான் கடிதம் எழுதியுள்ளேன் என்றார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories