ஓரிரு நாளில் ஜல்லிக்கட்டு நிச்சயம்: முதல்வர் பன்னீர்செல்வம் திட்டவட்டம்

சென்னை:

ஓரிரு நாளில் ஜல்லிக்கட்டு நிச்சயம் என்று முதல்வர் பன்னீர் செல்வம் திட்டவட்டமாகத் தெரிவித்தார். ஜல்லிக்கட்டு காளைகள் வாடிவாசல் வழியாக துள்ளிக்குதித்து வரும் என்று தில்லியில் இருந்து சென்னை திரும்பிய பின்னர், சென்னை விமான நிலையத்தில் உறுதிபடத் தெரிவித்தார்.

பிரதமர் மோடியை சந்திக்க தில்லி சென்ற தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெள்ளிக்கிழமை இன்று மதியம் சென்னை திரும்பினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழகத்தில் ஜல்லிக்கட்டை மீண்டும் நடத்தும் வகையில் முன்னேற்பாடுகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு அனுப்பியுள்ள வரைவு அவசரச் சட்டத்துக்கு உள்துறை, சட்டத்துறை, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை ஒப்புதல் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்று மாலைக்குள் ஒப்புதல் பெறப்பட்டு அவை குடியரசுத் தலைவர் பரிசீலனைக்கு அனுப்பிவைக்கப்படும். குடியரசுத் தலைவர் அலுவல் நிமித்தமாக வெளியூர் பயணம் மேற்கொண்டிருப்பதால் நாளை அல்லது நாளை மறுநாள் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் பெறப்படும். குடியரசுத் தலைவர் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தவுடன் அது ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்படும். தமிழகத்தில் இன்னும் ஓரிரு தினங்களில் ஜல்லிக்கட்டு நிச்சயம் நடைபெறும். ஜல்லிக்கட்டு காளைகள் வாடிவாசல் வழியாக துள்ளிக்குதித்து வரும்” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

Topics

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

Entertainment News

Popular Categories