புது தில்லி: எல்.கே. அத்வானி, அமிதாப் பச்சன் உள்பட 9 பேருக்கு பத்ம விபூஷண் விருதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார் மத்திய அரசு பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு பத்ம விருதுகளை அறிவித்தது. இதில் எல்.கே. அத்வானி, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உள்பட 9 பேருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று விருதுகள் வழங்கப்பட்டது. அத்வானி, அமிதாப் பச்சன், பிரகாஷ் சிங் பாதல், பேராசிரியர் மல்லூர் ராமசாமி ஸ்ரீனிவாசன் உள்பட 9 பேருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பத்ம விபூஷண் விருது வழங்கினார். முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சாமி, சுதா ரகுநாதன், பில்கேட்ஸ் உள்ளிட்ட 20 பேருக்கு பத்மபூஷண் விருதையும், அசோக் பாகவத், சஞ்சய் லீலா பன்சாலி, ராகுல் ஜெயின், தமிழகத்தைச் சேர்ந்த ராஜாராமன் உள்ளிட்ட 75 பேருக்கு பத்மஸ்ரீ விருதையும் வழங்கினார். சுதந்திர போராட்ட வீரரும் காசி பல்கலைக் கழக நிறுவுனருமான பண்டிட் மதன்மோகன் மாளவியா சார்பில் அவரது குடும்பத்தினரிடம் பாரத ரத்னா விருதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார். இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அத்வானி, அமிதாப் உள்பட 9 பேருக்கு பத்ம விபூஷண்: வழங்கினார் பிரணாப்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

