ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்ட சிறுமி: ஆபத்தான நிலையில் சிகிச்சை

மத்தியப் பிரதேசத்தில் ஓடும் ரெயிலில் இருந்து தூக்கி வீசப்பட்ட 8 வயது சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லாம் – மாண்ட்சோர் மாவட்ட எல்லையில், ரத்லாம்- ஆக்ரா போர்ட் ரயில் சென்றுகொண்டிருந்தது. அப்போது 8 வயதுச் சிறுமி ஒருவர் பொதுப் பெட்டியில் இருந்து திடீரெனத் தூக்கி வீசப்பட்டார். ரயிலில் இருக்கையில் அமர்வதில் ஏற்பட்ட தகராறில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்தச் சிறுமியின் தந்தை கான்வர்லால், ரத்லாமில் இருந்து நிம்பாகெராவுக்கு அந்த ரயிலில் சென்றுள்ளார். அப்போது, இருக்கையில் அமர்வதற்காக ஏற்பட்ட தகராறில் முகமத் தஸ்லிம் (45) என்பவர் சிறுமியை ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வெளியே வீசியுள்ளார். அந்தச் சிறுமியின் தந்தை கன்வர்லால் சிறுநீர் கழிக்க கழிவறைக்கு எழுந்து சென்ற நேரத்தில், அந்தச் சிறுமியை முகமது தஸ்லிம் அவ்வாறு ரயிலில் இருந்து தூக்கி வீசியுள்ளாராம். கீழே விழுந்த சிறுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தண்டவாளத்தின் அருகே விழுந்த அந்தச் சிறுமியை போலீசார் பார்த்துள்ளனர். உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு அருகிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதனிடையே ரயில்வே போலீசார், முகமது தஸ்லிம்மை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமி தூக்கி வீசப்பட்டது தொடர்பாக போலீஸார் தகவல் அறிந்ததும், அந்த ரயில், அடுத்த ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. முகமது தஸ்லிம் அங்கே கைது செய்யப்பட்டார் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

Entertainment News

Popular Categories