புது தில்லி: அரசின் நல திட்டங்களின் பலனைப் பெறுவதற்கு ஆதார் அட்டை எண் கட்டாயமில்லை என உச்ச நீதிமன்றம் மீண்டும் தனது நிலையை அழுத்தமாகத் தெரிவித்துள்ளது. ஆதார் அட்டை குறித்து கட்டாயப்படுத்த கூடாது என்று மத்திய மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் கடந்த 2013ம் ஆண்டின் உத்தரவை பின்பற்றுமாறும் அது மத்திய அரசை அறிவுறுத்தியுள்ளது. மத்திய அரசு கேட்டுக்கொண்டும் 2013 அக்டோபரில் ஆதார் எண்ணை அரசுத் திட்டங்களைப் பெற கட்டாயமாக்க வேண்டும் என்ற அரசின் வேண்டுகோளை தள்ளுபடி செய்தது தனி நீதிமன்றம்.
அரசுத் திட்டங்களைப் பெற ஆதார் அவசியமில்லை: உச்ச நீதிமன்றம்
Popular Categories


