December 6, 2025, 10:17 PM
25.6 C
Chennai

அயோத்தி போராட்டம்: மீண்டும் தலைப்பாகை அணிந்த சூர்யவன்ஷி க்ஷத்ரியர்கள்!

FB IMG 1574324459698 - 2025

சூர்யவன்ஷி க்ஷத்ரியர்கள் மீண்டும் தலைப்பாகை அணியத் துவங்கினர்.

அயோத்யாவிலும் அதனை சுற்றியுள்ள 150 கிராமங்களில் 1.5 லட்சத்திற்கும் அதிகமாக சூர்யவன்ஷி கத்ரியர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களை ஸ்ரீராமபிரானின் வழிவந்தவர்கள் என்று கருதுகின்றனர்.

500 வருடங்களுக்குப் பிறகு இவர்கள் மீண்டும் தலைப்பாகை அணியத் துவங்கியுள்ளனர்.

அயோத்தியில் ஸ்ரீராம ஜன்ம பூமியில் இருந்த ராம்லாலா ஆலயத்தை காத்திட பாபருடன் போரிட்டவர்கள் சூரியவன்ஷி க்ஷத்ரியர்கள். ஸ்ரீராம ஜன்ம பூமியைப் பாதுகாத்திட பாபரை எதிர்த்து தாகூர் கஜ சிங் தலைமையில் கடுமையாகப் போர்புரிந்த இவர்கள் தோல்வியைத் தழுவினர்.

அப்போரில் ஏராளமான சூரியவன்ஷி க்ஷத்திரியர்கள் வீரமரணம் அடைந்தனர். அப்போதிலிருந்து ஸ்ரீராம ஜன்ம பூமியை மீட்கும் வரை தலைப்பாகை அணியமாட்டோம், குடை பிடிக்கமாட்டோம், காலில் தோலால் தயாரிக்கப்பட்ட காலணி அணியமாட்டோம் என்று சபதம் ஏற்றனர்.

500 வருடங்கள் கடந்த பிறகும் கூட தங்கள் முன்னோர்கள் செய்த சபதத்தைக் காத்து பின்பற்றி வந்தனர்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்துள்ளதை மிக்க மகிழ்ச்சியுடன் வரவேற்ற இவர்கள் கிராமங்களில் பொதுவிழாக்கள் நடத்தி தலைப்பாகையை க்ஷத்ரிய வம்சத்தினருக்கு அளித்து வருகின்றனர்.

இதுவரை 400க்கும் அதிகமான தலைப்பாகைகள் வழங்கப்பட்டுள்ளன. அயோத்தியை சுற்றியுள்ள கிராமங்களில் இந்த நிகழ்ச்சி நடைபெறத் துவங்கியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories