அடடே…! அயோத்தியில் பசுக்களுக்கு ஸ்வெட்டர்!

Published:

goshala - 2026

அயோத்தியில் பசுக்களுக்கு ஸ்வெட்டர்கள் அணிவிக்கிறார்கள். பசுக்களுக்கும் கன்றுகளுக்கும் காளைகளுக்கும் இனி குளிரிலிருந்து பாதுகாப்பு கிடைக்கப் போகிறது.

அயோத்தி நகராட்சியில் நிர்வகிக்கப் படும் கோசாலைகளில் உள்ள பசுக்கள், கன்றுகள், காளைகளுக்கு குளிர்காலத்தில் வெப்பமான கோட்டு அணிவிக்கப் போவதாக நகராட்சி ஆணையர் நீரஜ் சுக்லா தெரிவித்தார்.

அயோத்தி புண்ணிய பூமியில் உள்ள பசுக்கள் காப்பகங்களில் தங்கியுள்ள பசுக்களின் பாதுகாப்பே தம் கடமை என்று தெரிவித்தார். 1200 பசுக்கள் 700 காளைகள் மற்றும் கன்றுகள் உள்ள ‘பைசிங்பூர்’ கோ சம்ரக்ஷணை கேந்திரத்தில் இருந்து இந்த நிகழ்ச்சி தொடங்கும் என்று கூறினார்.

முதலில் 100 பசுக்களுக்கு ஸ்வெட்டருக்கான ஆர்டர் அளித்துள்ளதாகக் கூறினார். நவம்பர் இறுதிக்குள் அவை கிடைத்துவிடும் என்றும் இரண்டு மூன்று நிலைகளாக முழு அளவில் ஸ்வெட்டர்கள் அணிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

சணலால் தயாரிக்கப்படும் இவற்றின் விலை ஒவ்வொன்றும் ரூ 250 முதல் 300 வரை இருக்கும் என்று சுக்லா குறிப்பிட்டார். கன்றுகளுக்கு மூன்று அடுக்கு, பசுக்களுக்கு இரண்டு அடுக்கு, காளைகளுக்கு ஒரு வரிசை என்று சணலில் பின்னப்பட்டு ஸ்வெட்டர்கள் தயாரிக்கப்படுவதாகக் கூறினார் .

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

அதோடு குளிர் அதிகமாக இருக்கும் போது குளிர் காய்வதற்கு நெருப்பு மூட்டப்படும் என்றும் அறிவித்தார். அயோத்தி கார்ப்பரேஷனில் உள்ள பசு பாதுகாப்பு நிலையத்தில் சிறப்பான சேவைகள் அளிப்பதே தம் நோக்கம் என்று நகர மேயர் ருஷிகேஷ் உபாத்யாய் தெரிவித்தார்.

இன்னும் அதிக அளவில் பசு பாதுகாப்பு நிலையங்களை அமைக்கப் போவதாக அவர் குறிப்பிட்டார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img