சிதம்பரத்தின் ஜாமீன் மனு… தீர்ப்பு ஒத்திவைப்பு! கார்த்தியும் சிக்குகிறார்!

chidambaram in tihar - 2026

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப் பட்டிருக்கிறது.

ஐஎன்எக்ஸ் மீடியா குறித்த நிதி முறைகேட்டு வழக்கில், சிபிஐ., தொடர்ந்து அமலாக்கத்துறையினால் கைது செய்யப் பட்டு இன்று நூறாவது நாளாக திகார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், அவரது ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு அளிப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில், இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது, உச்ச நீதிமன்றம்.

அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது, சிதம்பரத்தை சிறையில் வைத்திருப்பது ஏன் என மத்திய அரசு தரப்பு இன்று வாதிட்டது.

chidambaram karthi - 2026

தொடர்ந்து, கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாக, மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். அவருக்கு விதிக்கப் பட்டிருக்கும் தடை விலகியதும், இந்த வழக்கில் அவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப் படும் என்று கூறியுள்ளார்.

சிபிஐ வழக்கில் மட்டுமே கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமீன், என்றும், அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்ய
நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாகவும் மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் இன்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதனிடையே, இந்த வழக்கு விசாரணையின் போது, சிதம்பரம் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப் பட்ட கருத்தில்… ஐஎன்எக்ஸ் மீடியாவுடன் எனக்கு ஏதாவது ஒரு இமெயில் தொடர்போ, தொலைபேசி உரையாடலோ, அல்லது எனக்கும் அதற்குமான நிதி பரிவர்த்தனையோ ஏதாவது ஒன்றைக் காட்டி நிரூபித்தால், நீதிமன்றம் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டாம் என்று கூறப் பட்டது.

இருப்பினும் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர், தேதி குறிப்பிடாமல் ஜாமீன் மனு ஒத்திவைக்கப் பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories