சிதம்பரத்தின் ஜாமீன் மனு… தீர்ப்பு ஒத்திவைப்பு! கார்த்தியும் சிக்குகிறார்!

chidambaram in tihar - 2026

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப் பட்டிருக்கிறது.

ஐஎன்எக்ஸ் மீடியா குறித்த நிதி முறைகேட்டு வழக்கில், சிபிஐ., தொடர்ந்து அமலாக்கத்துறையினால் கைது செய்யப் பட்டு இன்று நூறாவது நாளாக திகார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், அவரது ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு அளிப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில், இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது, உச்ச நீதிமன்றம்.

அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது, சிதம்பரத்தை சிறையில் வைத்திருப்பது ஏன் என மத்திய அரசு தரப்பு இன்று வாதிட்டது.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!
chidambaram karthi - 2026

தொடர்ந்து, கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாக, மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். அவருக்கு விதிக்கப் பட்டிருக்கும் தடை விலகியதும், இந்த வழக்கில் அவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப் படும் என்று கூறியுள்ளார்.

சிபிஐ வழக்கில் மட்டுமே கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமீன், என்றும், அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்ய
நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாகவும் மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் இன்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதனிடையே, இந்த வழக்கு விசாரணையின் போது, சிதம்பரம் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப் பட்ட கருத்தில்… ஐஎன்எக்ஸ் மீடியாவுடன் எனக்கு ஏதாவது ஒரு இமெயில் தொடர்போ, தொலைபேசி உரையாடலோ, அல்லது எனக்கும் அதற்குமான நிதி பரிவர்த்தனையோ ஏதாவது ஒன்றைக் காட்டி நிரூபித்தால், நீதிமன்றம் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டாம் என்று கூறப் பட்டது.

இருப்பினும் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர், தேதி குறிப்பிடாமல் ஜாமீன் மனு ஒத்திவைக்கப் பட்டது.

ALSO READ:  நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Topics

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

Entertainment News

Popular Categories