சிதம்பரத்தின் ஜாமீன் மனு… தீர்ப்பு ஒத்திவைப்பு! கார்த்தியும் சிக்குகிறார்!

chidambaram in tihar - 2026

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப் பட்டிருக்கிறது.

ஐஎன்எக்ஸ் மீடியா குறித்த நிதி முறைகேட்டு வழக்கில், சிபிஐ., தொடர்ந்து அமலாக்கத்துறையினால் கைது செய்யப் பட்டு இன்று நூறாவது நாளாக திகார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், அவரது ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு அளிப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில், இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது, உச்ச நீதிமன்றம்.

அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது, சிதம்பரத்தை சிறையில் வைத்திருப்பது ஏன் என மத்திய அரசு தரப்பு இன்று வாதிட்டது.

chidambaram karthi - 2026

தொடர்ந்து, கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாக, மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். அவருக்கு விதிக்கப் பட்டிருக்கும் தடை விலகியதும், இந்த வழக்கில் அவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப் படும் என்று கூறியுள்ளார்.

சிபிஐ வழக்கில் மட்டுமே கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமீன், என்றும், அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்ய
நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாகவும் மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் இன்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதனிடையே, இந்த வழக்கு விசாரணையின் போது, சிதம்பரம் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப் பட்ட கருத்தில்… ஐஎன்எக்ஸ் மீடியாவுடன் எனக்கு ஏதாவது ஒரு இமெயில் தொடர்போ, தொலைபேசி உரையாடலோ, அல்லது எனக்கும் அதற்குமான நிதி பரிவர்த்தனையோ ஏதாவது ஒன்றைக் காட்டி நிரூபித்தால், நீதிமன்றம் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டாம் என்று கூறப் பட்டது.

இருப்பினும் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர், தேதி குறிப்பிடாமல் ஜாமீன் மனு ஒத்திவைக்கப் பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories