மும்பை பற பற; சென்னை பர பர: தயங்கும் வித்யாசாகர் ராவ்

Published:

புது தில்லி:
புது தில்லிக்கு வந்திருந்த தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், சென்னைக்கு இன்றோ நாளையோ வர வாய்ப்பு இருப்பதாகவும், அதன் பின்னர் அவர் சசிகலாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் என்றும் கூறப்பட்டது.

ஆனால், சசிகலா நாளை பதவியேற்பதில் திடீர் சிக்கல் முளைத்துள்ளது. தமிழக முதலமைச்சராக சசிகலா நாளை பதவியேற்க மாட்டார் என தகவல் வெளியானது. அவர் பிப்.9ம் தேதி பதவி ஏற்கக் கூடும் என்று கூறப்பட்டது.

இருப்பினும், ஆளுனர் பொறுப்பு வகிக்கும் வித்யாசாகர் ராவ், சசிகலாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க தயங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து அவர் சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் தில்லியில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், அவர் தில்லியில் இருந்து  மும்பைக்குச் செல்வதாகவும், அவர் சென்னைக்கு இன்று வர வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img