என்கவுண்டர் போலீஸார் மீது ரோஜாப் பூக்களைத் தூவி பொதுமக்கள் பாராட்டு!

Published:

encounter police flower1 - 2026

பெண் கால்நடை மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கொல்லப்பட்ட இடத்தில் காவல்துறையினர் மீது உள்ளூர் மக்கள் ரோஜா இதழ்களை பொழிந்தனர்.

பெண் டாக்டரை கொன்ற குற்றவாளிகளை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றதற்காக போலீசார் மீது ரோஜாப் பூக்களை தூவி மக்கள் அவர்களுக்கு ஆதரவாக கோஷம் போட்டனர்.

பெண் டாக்டரை பலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற குற்றவாளிகள் 4 பேர், போலீஸாரின் துப்பாக்கியப் பறித்து மிரட்டி தப்ப முயன்ற போது, போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். சம்பவ இடத்தில் உயரதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தனர்.

இதனிடையே, என்கவுன்டர் குறித்த தகவல் அறிந்து, பொது மக்களும் அங்கு குவிந்துள்ளனர். இதற்காக, பொது மக்கள் போலீசார் மீது பூக்களை தூவி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், போலீசாருக்கு ஆதரவாக கோஷம் போட்டனர்.

encounter police flower - 2026

”டிசிபி ஜிந்தாபாத்”, ”ஏசிபி ஜிந்தாபாத்” என கோஷம் போட்டனர். தொடர்ந்து போலீசாரைத் தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடினர்.

ALSO READ:  எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!

இன்று காலை கல்லூரிக்கு பேருந்தில் சென்ற கல்லூரி மாணவிகள் இந்த என்கவுன்டர் குறித்த தகவல் அறிந்தது, போலீசாரை நோக்கி, ஆதரவாக கோஷமிட்டு தங்களது ஆதரவையும் உற்சாகத்தையும் வெளிப்படுத்தினர். போலீஸாரை நோக்கி கையசைத்து தங்களது மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

முன்னதாக, கடந்த வாரம் போலீஸார் தங்கள் புகாரை உடனடியாகப் பெற்று களத்தில் இறங்கியிருந்தால், இந்தப் படுகொலைச் சம்பவத்தை தவிர்த்திருக்கலாம் என்று திசாவின் பெற்றோர் கூறினர். அதைக் கேட்டு போலீஸாரை பொதுமக்கள் திட்டித் தீர்த்தனர். தொடர்ந்து, சைபராபாத் காவல் ஆணையரை சந்தித்து, தங்கள் அதிருப்தியையும் வெளிப்படுத்தியிருந்தனர்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img