December 5, 2025, 6:37 PM
26.7 C
Chennai

தில்லியில் பெரும் தீ விபத்து: 43 பேர் உயிரிழப்பு!

Delhi Anaj Market - 2025

ஞாயிற்றுக் கிழமை அதிகாலை தில்லியில் பெரும் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தில்லி ஆனஜ் மண்டி அருகே இந்தத் தீவிபத்து ஏற்பட்டது. காலை 5.30 மணி அளவில் 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. இந்தத் தீவிபத்தில் இதுவரை 43 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப் பட்டுள்ளது.

தில்லியில் ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 43 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தீவிபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

தில்லியின் ராணி ஜான்சி சாலை, ஆனஜ் மண்டி பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை இன்று அதிகாலை 5.30 மணி அளவில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் அந்தப் பகுதிக்கு விரைந்தன.

இந்தத் தீவிபத்திற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இதில் 43 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்துள்ளனர். 56 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகிறது.

இந்தத் தீவிபத்து தொடர்பாக போலீசார் கூறுகையில், காலை நேரத்தில் தீவிபத்து ஏற்பட்டதாக தகவல் வந்தது. அந்தக் கட்டடத்தில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது குறித்து எந்தத் தகவலும் தரப்படவில்லை. அதனால் மீட்புப் பணியில் சற்று தாமதம் ஏற்பட்டது… என்றார். இருப்பினும், போலீசார் கூறுகையில், அந்தக் கட்டடத்தில் 59 பேர் இருந்ததாகக் கூறினர்.

தீவிபத்தில் படுகாயமடைந்து தில்லி எல்என்ஜேபி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சிலர் உயிரிழந்துள்ளனர். சிலர் காயங்களுடன் ஆர்எம்எல் மருத்துவமனை, ஹர்திங்கே மற்றும் ஹிந்து ராவ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தலைமை தீயணைப்பு அதிகாரி அதுல் கார்க் கூறுகையில், நாங்கள் இதுவரை 50க்கும் மேற்பட்டவர்களை மீட்டுள்ளோம். அவர்கள் புகையை சுவாசித்ததால் பாதிக்கப் பட்டுள்ளனர் என்றார். தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டு விட்டது என்றாலும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories