தில்லியில் பெரும் தீ விபத்து: 43 பேர் உயிரிழப்பு!

Delhi Anaj Market - 2026

ஞாயிற்றுக் கிழமை அதிகாலை தில்லியில் பெரும் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தில்லி ஆனஜ் மண்டி அருகே இந்தத் தீவிபத்து ஏற்பட்டது. காலை 5.30 மணி அளவில் 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. இந்தத் தீவிபத்தில் இதுவரை 43 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப் பட்டுள்ளது.

தில்லியில் ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 43 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தீவிபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

தில்லியின் ராணி ஜான்சி சாலை, ஆனஜ் மண்டி பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை இன்று அதிகாலை 5.30 மணி அளவில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் அந்தப் பகுதிக்கு விரைந்தன.

இந்தத் தீவிபத்திற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இதில் 43 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்துள்ளனர். 56 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகிறது.

இந்தத் தீவிபத்து தொடர்பாக போலீசார் கூறுகையில், காலை நேரத்தில் தீவிபத்து ஏற்பட்டதாக தகவல் வந்தது. அந்தக் கட்டடத்தில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது குறித்து எந்தத் தகவலும் தரப்படவில்லை. அதனால் மீட்புப் பணியில் சற்று தாமதம் ஏற்பட்டது… என்றார். இருப்பினும், போலீசார் கூறுகையில், அந்தக் கட்டடத்தில் 59 பேர் இருந்ததாகக் கூறினர்.

தீவிபத்தில் படுகாயமடைந்து தில்லி எல்என்ஜேபி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சிலர் உயிரிழந்துள்ளனர். சிலர் காயங்களுடன் ஆர்எம்எல் மருத்துவமனை, ஹர்திங்கே மற்றும் ஹிந்து ராவ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தலைமை தீயணைப்பு அதிகாரி அதுல் கார்க் கூறுகையில், நாங்கள் இதுவரை 50க்கும் மேற்பட்டவர்களை மீட்டுள்ளோம். அவர்கள் புகையை சுவாசித்ததால் பாதிக்கப் பட்டுள்ளனர் என்றார். தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டு விட்டது என்றாலும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories