ஹைதராபாத் பெண் டாக்டர் கொலை எதிரொலி! தெலங்கானாவில் முதல் ஜீரோ எஃப்.ஐ.ஆர்., பதிவு!

Published:

police station telangana - 2026

திசா கொலை வழக்கின் எதிரொலியால், பின்னர் எடுத்த முடிவுகளின் படி, தெலங்காணாவில் முதல் ஜீரோ எஃப்ஐஆர் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.

தெலங்காணா மாநிலத்தில் முதல் ஜீரோ எஃப்ஐஆர் வழக்கு பதிவானது. ஹன்மகொண்டாவில் உள்ள ஸ்பேதாரி காவல் நிலையத்தில் இந்த வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.

திசா சம்பவத்திற்குப் பிறகு எந்த போலீஸ் ஸ்டேஷனில் வேண்டுமானாலும் புகார் செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. வரங்கல் கமிஷனரேட் எல்லையில் உள்ள ஹன்மகொண்டாவில் சுபேதாரி காவல் நிலையத்தில் டிசம்பர் 7 சனிக்கிழமை இந்த வழக்கு பதிவானது.

24 வயது இளம்பெண் காணாமல் போனது குறித்து காவல் நிலையத்தில் பெண்ணின் குடும்பத்தார் புகார் அளித்தனர். சாயம் பேட்டை தொகுதியில் கோவிந்தாபூரைச் சேர்ந்த பெண்ணை காணவில்லை என்று சுபேதார் போலீசார் ஃஎப்ஐஆர் பதிவு செய்தனர். பெண்ணின் சிற்றப்பா கொடுத்த புகாரின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்தனர்.

ஹன்மகொண்டா நகரில் உள்ள சுபேதாரி காவல் நிலையத்தை முதல் ஜீரோ எஃப்ஐஆர் போலீஸ் ஸ்டேஷனாக வரங்கல் சிபி ரவீந்தர் சனிக்கிழமை காலை அறிவித்தார். பாதிக்கப்பட்டவர் எவராக இருந்தாலும் எந்த காவல் நிலையத்திலும் வேண்டுமானாலும் எஃப்ஐஆர் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

புகாரின் மீது உடனடியாக விசாரணையைத் தொடங்கிய காவல் நிலைய போலிசாருக்கு வரங்கல் சிபி ரவீந்தர் பாராட்டு தெரிவித்தார். இளம் பெண் காணாமல் போன கோவிந்தாபுரம் கிராமம் சாயம்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் எல்லையின்கீழ் வருகிறது.

ஆனால் அண்மையில் திசா கொலை வழக்கிற்கு பின்னர் எல்லை விவகாரத்தில் தொடர்பு இல்லாவிட்டாலும், எந்த போலீஸ் ஸ்டேஷனிலும் எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால் சுபேதாரி போலீசார் எப்ஐஆர் பதிவு செய்து பின்னர் அதனை சாயம் பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றினர்.

அந்த இளம்பெண்ணின் மொபைல்போன் கால் டேட்டாவை ஆதாரமாகக் கொண்டு, இரண்டு போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த அதிகாரிகளும் வழக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img