December 5, 2025, 5:43 PM
27.9 C
Chennai

ஹைதராபாத் பெண் டாக்டர் கொலை எதிரொலி! தெலங்கானாவில் முதல் ஜீரோ எஃப்.ஐ.ஆர்., பதிவு!

police station telangana - 2025

திசா கொலை வழக்கின் எதிரொலியால், பின்னர் எடுத்த முடிவுகளின் படி, தெலங்காணாவில் முதல் ஜீரோ எஃப்ஐஆர் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.

தெலங்காணா மாநிலத்தில் முதல் ஜீரோ எஃப்ஐஆர் வழக்கு பதிவானது. ஹன்மகொண்டாவில் உள்ள ஸ்பேதாரி காவல் நிலையத்தில் இந்த வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.

திசா சம்பவத்திற்குப் பிறகு எந்த போலீஸ் ஸ்டேஷனில் வேண்டுமானாலும் புகார் செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. வரங்கல் கமிஷனரேட் எல்லையில் உள்ள ஹன்மகொண்டாவில் சுபேதாரி காவல் நிலையத்தில் டிசம்பர் 7 சனிக்கிழமை இந்த வழக்கு பதிவானது.

24 வயது இளம்பெண் காணாமல் போனது குறித்து காவல் நிலையத்தில் பெண்ணின் குடும்பத்தார் புகார் அளித்தனர். சாயம் பேட்டை தொகுதியில் கோவிந்தாபூரைச் சேர்ந்த பெண்ணை காணவில்லை என்று சுபேதார் போலீசார் ஃஎப்ஐஆர் பதிவு செய்தனர். பெண்ணின் சிற்றப்பா கொடுத்த புகாரின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்தனர்.

ஹன்மகொண்டா நகரில் உள்ள சுபேதாரி காவல் நிலையத்தை முதல் ஜீரோ எஃப்ஐஆர் போலீஸ் ஸ்டேஷனாக வரங்கல் சிபி ரவீந்தர் சனிக்கிழமை காலை அறிவித்தார். பாதிக்கப்பட்டவர் எவராக இருந்தாலும் எந்த காவல் நிலையத்திலும் வேண்டுமானாலும் எஃப்ஐஆர் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

புகாரின் மீது உடனடியாக விசாரணையைத் தொடங்கிய காவல் நிலைய போலிசாருக்கு வரங்கல் சிபி ரவீந்தர் பாராட்டு தெரிவித்தார். இளம் பெண் காணாமல் போன கோவிந்தாபுரம் கிராமம் சாயம்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் எல்லையின்கீழ் வருகிறது.

ஆனால் அண்மையில் திசா கொலை வழக்கிற்கு பின்னர் எல்லை விவகாரத்தில் தொடர்பு இல்லாவிட்டாலும், எந்த போலீஸ் ஸ்டேஷனிலும் எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால் சுபேதாரி போலீசார் எப்ஐஆர் பதிவு செய்து பின்னர் அதனை சாயம் பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றினர்.

அந்த இளம்பெண்ணின் மொபைல்போன் கால் டேட்டாவை ஆதாரமாகக் கொண்டு, இரண்டு போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த அதிகாரிகளும் வழக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories