December 6, 2025, 6:50 AM
23.8 C
Chennai

நிலங்களை விவசாயிகளுக்கு திருப்பிக் கொடுத்து விடுவோம்: ஆந்திரா அமைச்சர்!

hyderabad - 2025

நிலங்களை விவசாயிகளுக்கு திருப்பிக் கொடுத்து விடுவோம்…என்று ஆந்திரா அமைச்சர் பரபரப்பு பேச்சு. ஆந்திரா தலைநகர் அமராவதி பற்றி பரபரப்பு கருத்து தெரிவித்த அமைச்சர் ‘பெத்திரெட்டி’ ராமச்சந்திரா ரெட்டி.

அமராவதியில் விவசாயிகளிடம் இருந்து பெற்ற 33 ஆயிரம் ஏக்கர் நிலங்களை திரும்ப அளித்து விடுவோம் என்றார் அமைச்சர். தேர்தலுக்கு முன்பே ஜெகன் வாக்களித்தார் என்று கூறினார் பெத்திரெட்டி.

தலைநகரின் நிலங்களை திருப்பிக் கொடுக்கப் போவதாக தேர்தலுக்கு முன்பே ஜெகன் அறிவித்தார் என்று நினைவு படுத்தினார். அமராவதியில் நிர்மாணம் செய்ய போகும் கட்டடங்கள் தற்காலிகமானவையே என்று சந்திரபாபுவே கூறினார் என்றார். தாமும் கூட அமராவதியை தற்காலிக தலைநகராகவே கருதுவதாகத் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தலைநகர் குறித்து கூறிய செய்திகள் பரபரப்பாக மாறின. 3 தலைநகர் இல்லாவிட்டால் 30 தலைநகர் வைத்துக் கொள்வோம் என்றார் அமைச்சர் .

“தலைநகரோடு மத்திய அரசுக்கு சம்பந்தமில்லை… அவர்களின் நிதி தேவை இல்லை. தலைநகருக்கு மத்திய அரசின் அனுமதியும் தேவையில்லை . அது மாநில எல்லைக்குள் உள்ள விஷயம் . லெஜிஸ்லேடிவ் கேபிடலுக்கு 300 ஏக்கர் போதும். ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் அவசியமில்லை. ஹைதராபாதில் செக்ரிடரியட், அசெம்பளி கட்டடங்கள் எத்தனை ஏக்கரில் உள்ளன?” என்று கேள்வி எழுப்பினார்.

தலைநகரை மாற்றக் கூடாது என்று அமராவதியில் தாரணா செய்பவர்கள் எல்லாம் தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்களே என்று குற்றம் சாட்டினார். நிலங்களைப் பிடுங்கிக் கொண்டவர்களே போராட்டம் நடத்துகிறார்கள் என்றார்.

அமராவதியில் இன்சைடர் டிரேடிங் மீது விசாரணை தொடரும் என்றார் ராமச்சந்திர ரெட்டி.

சந்திரபாபு எந்த உத்தேசத்தில் தலைநகரை அமராவதியில் ஏற்பாடு செய்தார் கூறவேண்டும்… துள்ளூரு தெலுகுதேசம் கட்சித் தலைவர்கள் குறைந்த விலைக்கு நிலங்களை விழுங்கி விட்டார்கள் என்று அமைச்சர் குற்றம் சாட்டினார்.

விசாகப்பட்டினத்தில் ஒய்சிபி தலைவர்கள் நிலங்களை வாங்கியதாக கூறுவது உண்மை இல்லை. இப்போதே அங்கு நிலங்களின் விலை அதிகமாக உள்ளது என்றார் அமைச்சர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories