நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு

Published:

arun-jaitley புது தில்லி: மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி அவருக்கு மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் கமாண்டோ வீரர்கள் பாதுகாப்பு வழங்குவர். அருண் ஜேட்லிக்கு இதுவரை தில்லி போலீஸின் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது. தற்போது ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பின்படி, ஜேட்லி பயணம் செய்யும் வாகனத்துடன் வழியேற்படுத்தித் தரும் வாகனம் மற்றும் பாதுகாப்பு வாகனம் செல்லும். அருண் ஜேட்லியின் வாகனத்தில் தானியங்கி துப்பாக்கி ஏந்திய 2 பாதுகாப்பு அதிகாரிகள் பயணம் செய்வர். ஜேட்லியின் பாதுகாப்புக்காக 60-க்கும் மேற்பட்ட வீரர்களை மத்திய தொழிலக பாதுகாப்புப் படை ஒதுக்கியுள்ளது. ஜேட்லி வசிக்கும், தில்லி கிருஷ்ண மேனன் சாலையில் உள்ள இல்லத்தில் துணை ராணுவ அதிரடிப்படை வீரர்கள் பாதுகாப்பு அளிப்பர். ஜேட்லி தவிர, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரும் ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு பெறுகின்றனர்

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

Related articles

Recent articles

spot_img