பரிதாபம்! வகுப்பறையில் சிறுநீர் கழித்த மாணவி! தோழிகள் சிரித்தார்கள் என்பதற்காக இப்படியா செய்வது?!

Published:

dyfi sfi girl - 2026

வகுப்பறையிலேயே இன்டர் படிக்கும் மாணவி சிறுநீர் கழித்தார். அதனால் உடன் படிக்கும் மாணவிகள் சிரித்தனர். அதனை பெரிய அவமானமாகக் கருதிய இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் நடந்தது.

சக மாணவிகள் சிரித்தார்கள் என்பதை அவமானமாக கருதிய இன்டர்மீடியட் மாணவி தூக்கில் தொங்கி உயிர் விட்டார்.

மேற்கு கோதாவரி மாவட்டம் ஜங்காரெட்டிகூடாவில் இந்த சம்பவம் நேர்ந்தது. போலீசாரும் குடும்பத்தினரும் தெரிவித்த விவரத்தின்படி… நீடமர்ரு மண்டலத்தை சேர்ந்த சுவாதி (18) ஜங்காரெட்டிகூடாவில் ஒரு பெண்கள் கல்லூரியில் இன்டர் இரண்டாம் வருடம் படிக்கிறார்.

கிறிஸ்மஸ் விடுமுறைக்காக வீட்டிற்கு சென்று பெண்கள் மீண்டும் கல்லூரிக்குத் திரும்பினர். வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு தனி வகுப்புகள் நடந்த போது சுவாதி சிறுநீர் கழிப்பதற்கு செல்ல வேண்டுமென்று ஆசிரியையை அனுமதி கேட்டார்.

ஆனால் அந்த ஆசிரியை அனுமதி மறுத்ததால் சிறுநீரை அடக்க முடியாமல் வகுப்பறையிலேயே பள்ளி உடையிலேயே சிறுநீர் கழித்து விட்டார்.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

அதைப் பார்த்த சக மாணவிகள் பக்கென்று சிரித்து விட்டனர். அதனால் மன வருத்தத்துக்கு ஆளான சுவாதி வகுப்பறையை கழுவுகிறேன் என்று சொல்லிச் சென்றார். தன் அறைக்கு திரும்பி துப்பட்டாவால் மின்விசிறியில் கட்டி தூக்கில் தொங்கி விட்டார்.

மாலை ஆறு மணிக்கு இரவு உணவு சமயத்தில் வரவேண்டிய பெண் வராததால் சந்தேகம் வந்து அறைக்குச் சென்று பார்க்கையில் சுவாதி மின்விசிறியில் தொங்கிக் கொண்டிருந்தார்

அதனால் அதிர்ச்சிக்குள்ளான சக மாணவிகளும் ஆசிரியைகளும் போலீசாருக்கு தெரிவித்தனர். உடனே ஜங்காரெட்டிகூடம் சிஐ நாகேஸ்வர நாயக், எஸ்ஐ அல்லு துர்காராவு சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பினர்.

ஆனால் இந்த செய்தியை தங்களிடம் கூறாமல் கல்லூரி ஊழியர்கள் மறைத்து விட்டார்கள் என்று குடும்பத்தினர் மருத்துவமனை அருகில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முதலில் கல்லூரியிலிருந்து தம் பெண் உடல் நிலை சரியில்லாமல் இருப்பதாகவும் ஆஸ்பத்திரியில் சேர்த்து இருப்பதாகவும் செய்தி தெரிவித்தார்கள் என்று தந்தை கூறினார்.

கல்லூரி ஊழியர்கள் தன் பெண்ணை வேதனைப் படுத்தி கொன்று விட்டார்கள் என்று போலீசாரிடம் குற்றம்சாட்டினர். அதனால் மருத்துவமனை எதிரில் பரபரப்பு ஏற்பட்டது . இதை அடுத்து, சம்பவம் பற்றி புகார் அளித்தால் வழக்கு பதிவு செய்வோம் என்று எஸ்ஐ கூறினார்.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img