அழகை விட ஆரோக்கியமே முக்கியம்: தெலங்காணா பெண்களுக்கு ஆளுநர் தமிழிசை டிப்ஸ்!

Published:

tamilisai cancer awareness program - 2026

பெண்களுக்கு அழகைவிட ஆரோக்கியமே முக்கியம் என்றார் தெலங்காணா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்!

கேன்சர் ஒரு வலியோடு கூடிய நோய் என்றும், கேன்சர் பற்றி பெண்களுக்கு புரிதல் அவசியம் என்றும் எடுத்துரைத்தார் தெலங்காணா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்!

உலக கேன்சர் தினம் தொடர்பாக ஹைதராபாதில் கேர் மருத்துவமனையில் கேன்சர் பிரீ ஸ்கிரீனிங் ப்ரோக்ராமுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ஆளுநர் தமிழிசை பேசுகையில் ஆரோக்கியம் பற்றி பெண்களுக்கு சிரத்தை தேவை. ஆரோக்கியம் பற்றி பெண்கள் அதிக கவனம் எடுத்துக் கொள்வதில்லை. அழகைவிட ஆரோக்கியமே முக்கியம்! என்று எடுத்துரைத்தார்.

மேலும், பெண்களுக்கு ஆரோக்கியத்தை விட புடவைகள் நகைகள் மீது அதிகம் ஆர்வம் உள்ளது. நெப்ரோலஜிஸ்ட் ஆன என் கணவர் இலவசமாக டயக்னஸிஸ் செய்தார். ஒரு எக்ஸிபிஷனில் நாங்கள் டயக்னசிஸ் பரிசோதனைகள் ஏற்பாடு செய்திருந்தோம். அப்போது பெண்கள் புடவைக் கடைக்கு அதிகமாகச் சென்றார்கள். ஆனால் ஸ்கிரீனிங் ஸ்டாலுக்கு வரவில்லை. அவர்களை அழைத்து ஸ்கிரீனிங் செய்தபோது அவர்களில் கேன்சர் உள்ள பெண்கள் இருந்தார்கள் என்று கூறினார்.

tamilisai cancer awareness program1 - 2026

புற்று நோய் கடைசி நிலையில்தான் பெரிதாக வெளித் தெரிகிறது என்றும் புற்றுநோய் கண்ட நோயாளிக்கு குடும்பத்தினரின் ஆதரவு மிகவும் தேவை என்றும் தமிழிசை கூறினார்.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

ஒவ்வொருவரும் ஆரோக்கியமான உணவு வகைகளை சாப்பிட வேண்டும் என்றும் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்தவேண்டும் என்றும் குறிப்பிட்ட டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன், நம் அடிப்படை வேர்களை மறந்து போகக் கூடாது என்றும் நம் பாரம்பரிய உணவுகள் ஆரோக்கியத்திற்கு நல்லவை என்றும் எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அரசின் சீஃப் விப் கொங்கடி சுனீதா பங்கு கொண்டார். 500 பேருக்கு மேல் இலவசமாக ஸ்கிரீனிங் நடத்தியதற்கு கொங்கடி சுனீதாவுக்கு ஆளுநர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img