வெளிநாட்டு நன்கொடையில் 10% எனக்கு! 90 % உமக்கு! மாட்டிய கருணா பால் விகாஸ்! மதமாற்றத்துக்கு அள்ளிவிட்டது அம்பலம்!

Compassion international - 2026

சென்னை: மத மாற்றங்களுக்கான நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சிபிஐ தன்னார்வ தொண்டு நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.

தடை செய்யப்பட்ட கம்பேசன் இண்டர்நேஷனல், கொலராடோவைச் சேர்ந்த நன்கொடையாளரிடம் இருந்து சென்னையைச் சேர்ந்த என்.ஜி.ஓ.,வான கருணா பால் விகாஸ் கோடிக்கணக்கான ரூபாய்களை பெற்றது குறித்து, மத்திய புலனாய்வு அமைப்பு சிபிஐ., வழக்குப் பதிவு செய்துள்ளது.

மே 2016 இல் அரசின் அனுமதியின்றி இந்திய தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு காம்பஷன் இன்டர்நேஷனல் நிதி அளிப்பதற்கு மத்திய பாஜக அரசு தடை விதித்தது.

அரசின் முடிவுக்குப் பிறகு, சில அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்தியா தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரியிருந்தனர். அப்போதைய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஜான் கெர்ரி 2017 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்திருந்தார். அப்போதைய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்து, மத்திய அரசின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரி அவருக்கு அழுத்தம் கொடுக்க முயன்றார்.

Compassion 1000x500 1 - 2026

எனினும், மத்திய உள்துறை அமைச்சகம் சட்ட மீறலை சுட்டிக்காட்டி, கம்பேஷன் இண்டர்நேஷனல் மூலம் கருணா பால் விகாஸுக்கு வரும் கோடிக்கணக்கான பணம், இந்தியாவில் வலுக்கட்டாய மதமாற்றக் குற்றங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் மெதடிஸ்ட் சர்ச், பாப்டிஸ்ட் சர்ச், சால்வேஷன் ஆர்மி, கிறிஸ்டியன் மிஷனரி சொசைட்டி, இன்டியன் பெந்தோகோஸ்டல் சர்ச் ஆகியவற்றுக்கு முறைகேடான வகையில், திசை திருப்பி விடப் படுவதாகக் கூறியது.

வெளிநாட்டு நிதி மத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதை ஆதாரத்துடன் சுட்டிக் காட்டியது அமைச்சகம்.

இந்த நிலையில் தான் கடந்த வாரம் சிபிஐ ஒரு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது! அதில், கம்பேஷன் இண்டர்நேஷனலை ஒரு குற்றம் சாட்டப்பட்ட அமைப்பாக குறிப்பிட வில்லை எனினும், வெளிநாட்டு பங்களிப்பு பதிவுச் சட்டத்தின் (எஃப்.சி.ஆர்.ஏ) கீழ் பதிவுசெய்யப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனம், வெளிநாட்டு நிதிப் பங்களிப்புகளின் கணக்கில் பொருளாதார, கல்வி மற்றும் சமூக சேவைக்கான வகையில் குறிப்பிடுகின்ற போதிலும், “தொடர்ந்து மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது” என்று சிபிஐ குற்றம் சாட்டியது. 2011-12 முதல் 2014-15 வரையிலான நிதி ஆண்டுகளில் இதன் வரவு செலவுக் கணக்கும் தாக்கல் செய்யப்பட்டது.

கருணா பால் விகாஸ் வெளிநாட்டு நிதிகளில் ஒரு பகுதியை மத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியதாக குற்றம் சாட்டி உள்துறை அமைச்சகத்தின் எஃப்.சி.ஆர்.ஏ., பிரிவு புகார் அளித்தது.

“வருமான வரித் துறையால் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு தணிக்கை, வெளிநாட்டு நிதியில் ஒரு பகுதி கருணா பால் விகாஸ் – சிபிவி (CBV) மூலம் மத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் வெளிப்படுத்துகிறது. மேலும் ‘ஏழைக் குழந்தைகளை முழுமையடைந்த கிறிஸ்தவ பெரியவர்களாக மாற்றுவது’ என்ற தனது நீண்டகால நோக்கத்தை கருணா பால் விகாஸ் அறிவித்துள்ளது!

இதன் மூலம் கிறிஸ்தவத்திற்கு மாற்றங்கள் உள்ளிட்ட மத நடவடிக்கைகளில் அது ஈடுபட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் வகுப்புவாத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் உள்ளன. எனவே, அவை எஃப்.சி.ஆர்.ஏ, 2010 ஐ மீறுவதாகும் ”என்று சிபிஐ., எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது.

“ஐடி துறையின் அறிக்கையின்படி, கருணா பால் விகாஸ், 10% வெளிநாட்டு நிதிப் பங்களிப்பை மட்டுமே தனக்கு பயன்படுத்தியது. மீதமுள்ள 90% நிதி, தமிழ்நாடு, கேரளா மற்றும் பிற மாநிலங்களில் உள்ள 300 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் எஃப்.சி.ஆர்.ஏ பிரிவில் பதிவு செய்யப்படவில்லை ”என்று எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப் பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories