December 6, 2025, 1:20 AM
26 C
Chennai

முன்னாள் ராணுவ வீரர் ரயிலில் பாய்ந்து தற்கொலை!

train acc - 2025

தெலங்கானா மாநிலம் குண்டூர் அருகே காதலியின் தாயாரை துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரர் ரயில் முன் பாய்ந்தார்.

கொலனகோண்டாப் பகுதியிலுள்ள ரயில் பாதையில் தலைத் தனியாகவும் உடல் தனியாகவும் கிடந்ததை காலையில் அவ்வழியாக சென்ற மக்கள் கண்டனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து அங்கு விரைந்த போலீசார் தலையையும், உடலையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

gun - 2025

மேலும் விசாரணையில் இறந்து கிடந்தது ராணுவ வீரரான எமினெனி பாலாஜி என்பது தெரியவந்தது. கடந்த ஆண்டின் விடுமுறையன்று எமினெனி பாலாஜி தனது சொந்த ஊரான கார்ப்பெலம் மண்டலுக்கு வந்திருந்த பொழுது ஒரு பெண்ணின் மேல் காதல் வயப்பட்டுள்ளார். அந்த பெண்ணோடு பல இடங்களுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் சில மாதம் கழித்து, பாலாஜி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் தெனாலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனால் இவருடைய ராணுவ பணி பறிப்போனது.

ஆத்திரமடைந்த பாலாஜி நாட்டு துப்பாக்கியுடன் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று அப்பெண்ணையும், அவரது தாயாரை சுட்டார். எனினும் அதிர்ஷ்டவசமாக இருவரும் காயத்துடன் உயிர் தப்பினர்.

அதற்குப்பின் அங்கிருந்து தப்பிய பாலாஜி பல இடங்களுக்கு சென்றார். இது தொடர்பான புகாரில் பாலாஜியை போலீசார் தேடி வந்தனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகிய அவர் கொலனகோண்டாப் பகுதியிலுள்ள ரயில் பாதையில் விழுந்து தற்கொலை செய்துக்கொண்டார்.

விசாரணை நடத்திய போலீசார் இவ்வாறு கூறுகின்றனர். எனினும் அவர் தற்கொலை செய்துக்கொண்டாரா, யாரேனும் கொலை செய்தனரா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories