ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைப்பு!

ipl2020 schedule - 2026

கொரோனா அச்சத்தால் ஐ.பி.எல் போட்டிகள் ஏப்ரல் -15-ம் தேதி வரை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஐபிஎல் முதலில் மார்ச் 29 ஆம் தேதி துவங்க திட்டமிடப்பட்டது. இந்த முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் மோத திட்டமிடப் பட்டிருந்தது. ஆனால் கோவிட் -19 பெருமளவில் பரவுவதைத் தடுக்க அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, ஐபிஎல் நிர்வாகம் எடுத்த முடிவுகளின் அடிப்படையில், பி.சி.சி.ஐ.யின் தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் இதுகுறித்து முடிவெடுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கெனவே கொரோனா பரவலாக்கத்தைத் தடுக்கும் நடவடிக்கையாக, ரசிகர்கள் பெருமளவு கூடுவதைத் தடுக்க ரசிகர்கள் இல்லாமல் போட்டிகளை நடத்தலாம் என்று யோசிக்கப் பட்டது. இந்நிலையில், வரும் ஏப்ரல் 15 ஆம் தேதி ஐபிஎல் தொடங்கியதும், போட்டிகளை மூடிய அரங்கத்தில் நடத்தலாம் என்று கூறப்படுகிறது

வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பதும், ரசிகர் கூட்டங்களின் கட்டுப்படுத்துவதும் இருக்கும் வரை விளையாட்டு நிகழ்ச்சிகள் முற்றிலுமாக ரத்து செய்யப்படாது என்று மத்திய இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கிரென் ரிஜிஜு கூறியிருந்தார்! இருப்பினும் வெளியுறவு அமைச்சகம் பி.சி.சி.ஐ.யிடம் திட்டமிடப்பட்ட தேதியில் போட்டியைத் தொடங்க வேண்டாம் என்று அறிவுறுத்தியது.

இந்நிலையில், ஏப் 15ம் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப் படும் என்று வெளியான செய்திக்கு இடையில், ஐபிஎல் முன்னாள் தலைவர் ராஜீவ் சுக்லா டிவி சேனல் ஒன்றில் பேட்டி அளித்த போது, ஐபிஎல் போட்டிகள் திட்டமிடப்பட்ட அட்டவணைப்படி தொடரும் என்று கூறினார்.

இந்தியா ஏற்கெனவே சர்வதேச விசாக்களை ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நிறுத்தி வைத்துள்ளது! எனவே, ஐபிஎல் போட்டிகளுக்கும் திட்டமிடப்பட்ட தேதியில் வெளிநாட்டு வீரர்கள் வர மாட்டார்கள். இந்நிலையில், திட்டமிடப்பட்ட மார்ச் 29ம் தேதிக்கு முன்னர் வெளிநாட்டு வீரர்கள் வருவதற்கு சாத்தியமில்லை. .அதே நேரம், வெளிநாட்டு வீரர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கும் நிர்வாகம் விரும்பவில்லை.

எனவே ஒரு தற்காலிக ஒத்திவைப்பாக ஐபிஎல் போட்டிகள் தள்ளிவைக்கப் பட்டிருக்கின்றன. வெளியுறவு அமைச்சகத்தால் விசாக்களை நிறுத்தி வைப்பது தொடர்பான எந்தவொரு நீட்டிப்பும் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் மேலும் ஒத்திவைக்கப்படுவதையோ அல்லது போட்டிகள் முற்றிலும் ரத்து செய்யப் படுவதையோ தான் குறிக்கும். எனவே ஐபிஎல் போட்டிகளின் இந்த வருட தலைஎழுத்து வெளியுறவு அமைச்சகத்தின் கையில் இருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories