ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைப்பு!

ipl2020 schedule - 2026

கொரோனா அச்சத்தால் ஐ.பி.எல் போட்டிகள் ஏப்ரல் -15-ம் தேதி வரை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஐபிஎல் முதலில் மார்ச் 29 ஆம் தேதி துவங்க திட்டமிடப்பட்டது. இந்த முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் மோத திட்டமிடப் பட்டிருந்தது. ஆனால் கோவிட் -19 பெருமளவில் பரவுவதைத் தடுக்க அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, ஐபிஎல் நிர்வாகம் எடுத்த முடிவுகளின் அடிப்படையில், பி.சி.சி.ஐ.யின் தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் இதுகுறித்து முடிவெடுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கெனவே கொரோனா பரவலாக்கத்தைத் தடுக்கும் நடவடிக்கையாக, ரசிகர்கள் பெருமளவு கூடுவதைத் தடுக்க ரசிகர்கள் இல்லாமல் போட்டிகளை நடத்தலாம் என்று யோசிக்கப் பட்டது. இந்நிலையில், வரும் ஏப்ரல் 15 ஆம் தேதி ஐபிஎல் தொடங்கியதும், போட்டிகளை மூடிய அரங்கத்தில் நடத்தலாம் என்று கூறப்படுகிறது

வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பதும், ரசிகர் கூட்டங்களின் கட்டுப்படுத்துவதும் இருக்கும் வரை விளையாட்டு நிகழ்ச்சிகள் முற்றிலுமாக ரத்து செய்யப்படாது என்று மத்திய இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கிரென் ரிஜிஜு கூறியிருந்தார்! இருப்பினும் வெளியுறவு அமைச்சகம் பி.சி.சி.ஐ.யிடம் திட்டமிடப்பட்ட தேதியில் போட்டியைத் தொடங்க வேண்டாம் என்று அறிவுறுத்தியது.

இந்நிலையில், ஏப் 15ம் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப் படும் என்று வெளியான செய்திக்கு இடையில், ஐபிஎல் முன்னாள் தலைவர் ராஜீவ் சுக்லா டிவி சேனல் ஒன்றில் பேட்டி அளித்த போது, ஐபிஎல் போட்டிகள் திட்டமிடப்பட்ட அட்டவணைப்படி தொடரும் என்று கூறினார்.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

இந்தியா ஏற்கெனவே சர்வதேச விசாக்களை ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நிறுத்தி வைத்துள்ளது! எனவே, ஐபிஎல் போட்டிகளுக்கும் திட்டமிடப்பட்ட தேதியில் வெளிநாட்டு வீரர்கள் வர மாட்டார்கள். இந்நிலையில், திட்டமிடப்பட்ட மார்ச் 29ம் தேதிக்கு முன்னர் வெளிநாட்டு வீரர்கள் வருவதற்கு சாத்தியமில்லை. .அதே நேரம், வெளிநாட்டு வீரர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கும் நிர்வாகம் விரும்பவில்லை.

எனவே ஒரு தற்காலிக ஒத்திவைப்பாக ஐபிஎல் போட்டிகள் தள்ளிவைக்கப் பட்டிருக்கின்றன. வெளியுறவு அமைச்சகத்தால் விசாக்களை நிறுத்தி வைப்பது தொடர்பான எந்தவொரு நீட்டிப்பும் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் மேலும் ஒத்திவைக்கப்படுவதையோ அல்லது போட்டிகள் முற்றிலும் ரத்து செய்யப் படுவதையோ தான் குறிக்கும். எனவே ஐபிஎல் போட்டிகளின் இந்த வருட தலைஎழுத்து வெளியுறவு அமைச்சகத்தின் கையில் இருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories