ஐதராபாத் காந்தி மருத்துவமனையில் டாக்டர்கள் மீது தாக்குதல்! கண்டித்த அமைச்சர்கள்!

Published:

gandhi hospital - 2026

ஹைதராபாத் காந்தி மருத்துவமனையில் கொரோனா ஐசொலேஷன் வார்டில் டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்தப் பட்டதற்கு அமைச்சர்கள் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

தெலங்காணா மாநிலம் இதனை சீரியசாக எடுத்துக் கொண்டுள்ளது. டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடினமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.

காந்தி மருத்துவமனையில் கரோனா ஐசொலேஷன் வார்டில் டாக்டர்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. ஏப்ரல் 1ம் தேதி மாலை ஒரு கரோனா நோயாளி இறந்து போனார். அதே வார்டில் சிகிச்சை பெற்று வந்த அவருடைய சகோதரர் டாக்டர்களை தாக்கினார். இந்தச் சம்பவம் தெலங்காணா முழுவதும் தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது.

உயிரைப் பணயம் வைத்து கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்களை இவ்வாறு தாக்குவது சரிதானா என்று பரபரப்பாக பேசப்படுகிறது. தெலங்காணா மாநிலம் இதனை மிகவும் சீரியஸாக எடுத்துக் கொண்டுள்ளது. டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கடுமையாக தண்டிப்போம் என்று எச்சரித்துள்ளது.

காந்தி மருத்துவமனையில் நடந்த இந்த சம்பவத்தை தெலங்காணா அமைச்சர்கள் ஈடல ராஜேந்தர் , தலசானி ஸ்ரீனிவாச யாதவ், தெலங்காணா பிஜேபி தலைவர் பண்டி சஞ்சய் தீவிரமாக கண்டித்துள்ளனர்.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img