
புது தில்லி:
தில்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்த பின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது,
குடி மராமத்து பணிக்காக மத்திய அரசு ரூ.500 கோடி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தேன்.
இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினேன்.
மத்திய அரசு திட்டங்களுக்கான நிலுவைத் தொகையை விடுவிக்கவும் கோரிக்கை வைத்தேன்.
தமிழகத்திற்கு தேவையான திட்டங்கள் குறித்து பிரதமரிடம் கோரிக்கை மனு அளித்தேன்.
பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தேன்.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விரைவில் அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன்.
விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினேன்… என்று கூறினார்.



