அட பாவிகளா… பிள்ளையார் கோவில் என்ன இஸ்லாமியர்கள் தங்கும் தனிமை முகாமா?! வெளங்குவீங்களா?!

kanippakkam temple quarantine - 2026

ஹிந்துக் கோவில்கள் கொரோனா நோய்க்கான குவாரண்டின் – தனிமைப் படுத்தல் நிலையங்களா? வேறு எங்குமே இடம் கிடைக்கவில்லையா…? என்று குமுறுகின்றனர் ஆந்திரப் பிரதேசத்தில்!

நாளுக்கு நாள் ஆந்திர பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகின்றது. டெல்லியில் உள்ள மர்கஜ் பிரார்த்தனைகளுக்கு சென்று வந்தவர்களுக்கு கொரோனா பரவியுள்ளதால் மாநிலத்தில் கொரோனா பாசிடிவ் கேசுகளின் எண்ணிக்கை மிக மிக அதிகமாகிக் கொண்டே வருகிறது.

இதனால் முன்னெச்சரிக்கையாக நோய் பாதித்தவர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் உறவினர்களையும் ஆலயங்களில் தங்க வைக்கிறார்கள்.

அவர்களை சந்தித்தவர்களையும் குவாரண்டின் சென்டர்களுக்கு அனுப்பி வருகிறார்கள் அதிகாரிகள். நாளுக்குநாள் நிலைமை தீவிரமாகி வருவதால் நோய் பாதிக்கப்பட்டவர்களும் அதிகமாகி வருகிறார்கள். அதனால் ஹிந்து ஆலயங்களில் கூட குவாரண்டின் சென்டர்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஆந்திர பிரதேச அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.

இந்த நிலையில் முதலாக ஸ்ரீகாலஹஸ்தி, காணிப்பாக்கம் ஆலயங்களை அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

ஆனால் இந்த விஷயத்தில் மாநில பிஜேபி தலைவர் கன்னா லட்சுமி நாராயணா தீவிரமான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். ஆந்திர பிரதேச முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். வேறு எங்குமே இடமே இல்லாதது போல் ஆலயங்களை குவாரண்டின் சென்டர்களாக ஏற்பாடு செய்வது வருத்தத்திற்குரியது என்று கடிதம் எழுதியுள்ளார்.

ஹிந்துக்களின் மன உணர்வுகளை அவமதிக்கும் வகையில் அரசாங்கம் நடந்து கொள்கிறது என்று விமர்சித்துள்ளார். ஆட்சியருடன் கூட பேசுவதற்கு தன் கட்சி தலைவர்கள் முயற்சித்து வருகிறார்கள் என்றும் ஆட்சியர் நடந்து கொள்ளும் விதம் பொறுப்பற்ற விதமாக இருக்கிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளார் .

இந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கன்னா லட்சுமி நாராயணா கோரிக்கை வைத்துள்ளார்.

ஜகன் முதலில் தாம் சார்ந்த சர்சுகளை வழங்கி ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கணும்; காணிப்பாக்கம் கோவிலை குவாரன்டைன் சென்டராக கொடுத்துள்ளார்கள். ஏன் ஒரு மசூதியையோ சர்ச்சை யோ கொடுக்கவில்லை என்று பக்தர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். அங்கும் போய் இவர்கள் துப்பி வைப்பார்களே என்று வேதனை தெரிவிக்கின்றனர்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

செருப்பு போட்டுக் கொண்டு கோயிலுக்குப் போகக் கூடாதே… அவ்வாறு செருப்புக் காலோடு உள்ளே போகக்கூடாது என்று அங்கு இருக்கும் போலீசாவது சொல்லக்கூடாதா என்று வருந்துகிறார்கள் பக்தர்கள். ஒரு மசூதிக்கோ சர்ச்சுக்கோ ஹிந்துக்கள் சென்றால் அவர்கள் எவ்வாறு எதிர்ப்பார்கள்? அது தெரியாதா? எங்கே போயிற்று செக்யூலரிசம் என்று ஜகனிடம் கேட்கிறார்கள் பக்தர்கள்!

இந்நிலையில் இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் கடந்த இரு நாட்களாக பெரிதும் விவாதிக்கப் பட்டு வந்தது. இது குறித்த டிவிட்டர் பதிவுகளில் பலரும் இதனைக் குறிப்பிட்டு, தங்கள் கண்டனங்களையும் வருத்தத்தையும் வெளிப்படுத்தி வந்தனர்.

இந்த வீடியோ வைரலான நிலையில், இந்த இடத்தின் பின்னணி குறித்து பதிவிட்ட சிலர், இது விநாயகர் கோவில் அல்ல, இது ஒரு தங்கும் விடுதிதான். கோயிலைச் சார்ந்த தங்கும் விடுதி என்பதால் அதில் என்ன குற்றம் காண முடியும் என்று பதில் அளித்தனர்.

ALSO READ:  நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

அதே நேரம், இது கோயிலைச் சார்ந்த ஒரு கி.மீ., தொலைவுக்கும் குறைவான தொலைவில் உள்ள கணேஷ் சதன் விடுதி என்றும், கோயிலைச் சார்ந்ததாக இருந்தாலும் அங்கே பூஜைகள் எதுவும்கிடையாது என்பதால் அதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்வதில் என்ன தவறு என்றும் சிலர் கருத்துகளைத் தெரிவித்தனர். இந்த விவகாரம் சமூகத் தளங்களின் வழியே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

பஞ்சாங்கம் மே 30 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் மே 29 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஒரு துரதிர்ஷ்டவசமான பிரதமர்

நரேந்திர மோதிஜி பிரதமராகப் பதவியேற்று 12 வருடங்கள் நிறைவடைவதையொட்டி சிறப்புப் பதிவு:

Entertainment News

Popular Categories