குடிமகன்களுக்கு ஒரு குட் நியூஸ்!

Published:

liquor - 2026

குடிமகன்களுக்கு குட் நியூஸ்… 5 நாட்களுக்கு திறந்து வைக்கப் போகும் மதுக்கடைகள்.

லாக்டௌனில் மது விற்பனையை அரசாங்கங்கள் தடை விதித்துள்ளதால் குடிகாரர்கள் அவஸ்தையில் உள்ளார்கள். அதனால் ஒரேடியாக மனநல மருத்துவமனையில் சேருவதற்கு கூட குடிமகன்கள் கியூவில் நிற்கிறார்கள். மறுபுறம் மதுவுக்காக ஆயிரக்கணக்கில் செலவழித்து பிளாக்கில் வாங்கி குடிக்கும் சூழலும் நிலவுகிறது.

இந்த பின்னணியில் மேகாலயா அரசாங்கம் ஒரு முக்கியமான தீர்மானம் எடுத்துள்ளது.

திங்கட்கிழமை ஏப்ரல் 13 லிருந்து வெள்ளிக்கிழமை ஏப்ரல் 17 வரை மாநிலத்தில் மதுக்கடைகளை திறக்க போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த ஆறு நாட்களும் காலை 9லிருந்து மாலை 4 மணி வரை மதுக்கடைகள் திறந்திருக்கும் என்று மேகாலயா அரசாங்கம் ஒரு அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

அதோடு கூட சில ஷரத்துக்களையும் விதித்துள்ளது. மதுக்கடைகளின் அருகில் சோஷல் டிஸ்டன்ஸ் கடைபிடிக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. அவரவர் கிராமத்திலேயே அவரவர் மது வாங்க வேண்டும் என்றும் வேறு கிராமங்களுக்கு செல்லக் கூடாது என்றும் விதித்துள்ளது.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

இந்த மாநிலத்தில் இதுவரை ஒரு கொரோனா கேசு கூட பதிவாகவில்லை என்பதால் லாக்டௌனை ஓரளவிற்கு தளர்த்தி உள்ளதாக தெரிகிறது.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img