தில்லி மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக முதியவர் தில்லியில் உயிரிழப்பு!

corona dead body 1
corona dead body 1

தில்லி மாநாட்டில் கலந்து கொண்டதால் சுல்தான்புரியில் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்த 60 வயது தமிழக முதியவர் உயிரிழந்தார். கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் இருந்த கிட்டத்தட்ட 762 பேர், தில்லியில் சமீபத்தில் எல்.ஜே.என்.பி, ஜி.டி.பி மற்றும் ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் இருந்து வடமேற்கு தில்லியில் உள்ள சுல்தான்புரி மையத்திற்கு மாற்றப்பட்டனர்.

இவர்களில் தமிழகத்தை சேர்ந்த ஒருவரும் இங்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர், கடந்த மாதம் தில்லி நிஜாமுதீன் மாநாட்டில் கலந்து கொண்டதால் அவரை தனிமைப்படுத்தி பரிசோதனை செய்தனர்.

அவருக்கு கொரோனா தொற்று இருந்ததால், தனிமை வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவருக்கு நேற்று முன்தினம் இரவு நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிவித்ததை அடுத்து டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். ஆனால், உயிரிழந்தவர் நீரிழிவு நோயாளி என்றும், அவருக்கு டாக்டர்கள் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என்றும், சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காததன் காரணமாகவே அவர் உயிரிழந்ததாகவும் கூறி அவரது உறவினர்கள் உள்ளிட்டோர் மருத்துவமனை முன்பாக கூடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால், இந்த குற்றச்சாட்டை மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது, மேலும், உயிரிழந்த நபர் சர்க்கரை நோய் இருப்பதை பற்றி தெரிவிக்கவில்லை. கோவிட்-19 மையத்திற்கு அழைத்து வரப்படும் நோயாளிகளிடம் அவர்களது முந்தைய நோய் மற்றும் பயண விவரங்கள் அனைத்தும் பெறப்படுகிறது.

ALSO READ:  தேர்தலில் வாக்களிக்க... சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

ஆனால், இறந்தவர் தனக்கு சர்க்கரை நோய் இருப்பதை மருத்துவர்களிடம் தெரிவிக்கவில்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
மருத்துவர்கள் கூறும்போது,’ இந்த விவகாரத்தில் புகார் செய்யப்பட்டதை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும், இறந்தவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அதன் முடிவுக்காக காத்திருக்கிறோம். அந்த அறிக்கை வந்தால் மட்டுமே அவர் எதனால் இறந்தார் என்பது தெரியவரும்’ என தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories