தில்லியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.7 ஆகப் பதிவு

Published:

earth quake tremer - 2026

புது தில்லி:

தில்லியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.7ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் அலறியபடி வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

தில்லி மற்றும் வடமாநில பகுதிகளில் இன்று அதி காலை 4.20க்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ஒரு நிமிடம் வரை இது நீடித்தது. ஹரியானா மாநிலத்தின் ரோட்டக் பகுதியில் நிலநடுக்கத்தின் மையப்புள்ளி உணரப்பட்டது.

நிலநடுக்கத்தால், கட்டடங்கள் குலுங்கின. வீட்டில் இருந்த பொருட்கள் உருண்டன. இதனால் பீதியடைந்த மக்கள் பதறி அடித்து, வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

Related articles

Recent articles

spot_img