ஓவிய ஆசிரியர் வரைந்த பிரமாண்ட ‘ஜெகன்’ பெயிண்டிங்! எதுக்கு தெரியுமா?

Published:

tenali art teacher pays tribute to ap cm ys jagan with 12 012 ft painting
tenali art teacher pays tribute to ap cm ys jagan with 12 012 ft painting

ஆந்திரா முதல்வர் ஜெகனின் பெரிய அளவு பெயிண்டிங்… இப்போது தெனாலியில் வருவோர் போவோரை வசீகரிக்கிறது.

கரோனாவை கட்டுப்படுத்த மிகப் பெரிய முயற்சியில் இறங்கியுள்ள ஜகனை பாராட்டும் விதத்தில் 12012 சதுர அடி பெயிண்டிங்கை தெனாலியில் ஆரம்பித்துள்ளார்கள்.

கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி செய்துவரும் முயற்சி உலகிற்கே ஸ்பூர்த்தி அளிப்பதாக இருக்கிறது என்று கூறி அதற்கு அடையாளமாக மிகப்பெரிய பெயிண்டிங்கில் அவருடைய உருவத்தை வரைவதற்கு சனிக்கிழமை அன்று குண்டூர் மாவட்டம் தெனாலியில் ஆரம்பித்துள்ளார்கள்.

உள்ளூர் முனிசிபல் மார்க்கெட் சென்டரில் சாலை மீது 78 அடி உயரம் 154 அடி அகலம், மொத்தம் 12012 சதுர அடிகள் அளவில் மிகப்பெரிய பெயிண்டிங்கை வரைந்து வருகிறார்கள்.

இதனை 50 மணி நேரத்தில் முடிக்க உள்ளார்கள். முனிசிபல் பாடசாலை டிராயிங் மாஸ்டர் விஜய் பிரகாஷ், பிற ஆசிரியர்கள், என்சிசி அதிகாரி பெல்லம்கொண்ட வெங்கட், புலி பாஸ்கர், பரிச சர்தார் முதலானவர்களோடு சேர்ந்து இதனை வரைந்து வருகிறார்கள். இந்த மிகப்பெரிய பெயிண்டிங் ரிகார்டு சிருஷ்டிக்கப் போவதாக அவர்கள் கூறுகிறார்கள்.

ALSO READ:  முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

தெனாலி மண்ணுக்குப் பெருமை சேர்க்கும் கலை மற்றும் பண்பாடு காரணமாக இது ஆந்திராவின் பாரிஸ் என்று அழைக்கப்படுகிறது. அதோடு மூன்று கால்வாய்கள் தெனாலியில் பாய்கின்றன.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img