கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் வீட்டிலேயே அடங்கி கிடக்கிறார்கள். ஆனால் சிலர் மட்டும் லாக்டௌன் நிபந்தனைகளை மீறி வெளியில் வந்து அலைகிறார்கள்.
அதனால் பல இடங்களில் போலீசார்கள் நிபந்தனைகளை மீறுபவர்கள் மீது கடினமான நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். வாகனங்களை சீஸ் செய்வதோடு வழக்குப் பதிவும் செய்து வருகிறார்கள்.
ஆனால் நிபந்தனைகளை மீறி ரோடு மீது அலைபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் சில டிராபிக் போலீசார் மட்டும் லஞ்சம் வாங்குகிறார்கள். வெளியில் வந்தவர்களிடம் பணம் வசூல் செய்து கொண்டு பார்த்தும் பார்க்காதது போல் விட்டுவிடுகிறார்கள்.
அப்படிப்பட்டவர்கள் மீது கிருஷ்ணா மாவட்டம் போலீசார் சாட்டையை சுழற்றி உள்ளார்கள். வாகனங்களை ஓட்டி வருபவர்களிடம் பணம் வசூல் செய்து வரும் போலீசார் மீது நடவடிக்கை எடுத்து வருவதாக வெள்ளியன்று விஜயவாடா நகர கமிஷனர் துவாரகா திருமல ராவு தெரிவித்தார்.
விஜயவாடா ஒய்வி ராவு ஜங்ஷன் அருகில் லஞ்சம் வாங்கிய ஒன் டவுன் ட்ராஃபிக், டு டௌன் கான்ஸ்டபிள்கள் மீது சஸ்பென்ஷன் வேட்டு வைத்துள்ளார். இவர்கள் இருவரிடமும் துறை தொடர்பான விசாரணையை நடத்தும் படி சிபி துவாரகா திருமலை உத்தரவிட்டுள்ளார்.
பணம் வசூலின் பின்னால் யார் யாருடைய உற்சாகம் ஊட்டுதல் இருந்தாலும் தகுந்த நடவடிக்கை எடுப்போம் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.