December 6, 2025, 2:16 PM
29 C
Chennai

திடீரென்று கேட்ட பயங்கர ஒலி! பீதியில் சாலைக்கு ஓடிய பெங்களூர் மக்கள்!

bangalore - 2025

பெங்களூருவில் காதை கிழிக்கும் அளவில் மர்ம ஒலியை உணர்ந்த பொது மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

கர்நாடகா மாநிலம் பெங்களுருவில் இன்று மதியம் சுமார் 1 மணி 20 நிமிடத்தின் போது, சப்தம் டமால் என்ற ஒலியுடன் வெளிப்பட்டது. ஒரே நேரத்தில், பெங்களுருவின் பல்வேறு பகுதிகளிலும் இந்த ஒலி உணரப்பட்டது.

கிழக்கு பெங்களூர் பகுதியான, கே.ஆர்.புரம் துவங்கி இந்திரா நகர், கோரமங்களா, ஒயிட்பீல்டு, பன்னேருகட்டா சாலை, பொம்மனஹள்ளி, பேகூர், எலக்ட்ரானிக் சிட்டி என சம்பந்தமே இல்லாத தொலைதூர பகுதிகளிலுள்ள மக்களும் ஒரே நேரத்தில் இந்த சத்தத்தை உணர்ந்துள்ளனர்.

அந்த பயங்கர சத்தத்தால் வீடுகளில…ஜன்னல் மற்றும் கதவுகள் அதிர்ந்தன . திடீரென ஏற்பட்ட இந்த சத்தத்தால் பதற்றமடைந்த மக்கள் வீடுகளை விட்டு தலைதெறிக்க சாலைகளுக்கு ஓடினர் . ஒருவரை மாற்றி ஒருவர் என்ன நடந்தது என விசாரிக்க ஒருவருக்கும் ஏதும் புரியவில்லை .

bangalore 1 - 2025

இதை தொடர்ந்து உடனடியாக பத்திரிகையாளர்கள் மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர் ராவை தொடர்பு கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். போர்விமானங்கள் பறக்கும் போது இது போன்ற சத்தம் கேட்கும். ஆனால் விமானங்கள் ஏதும் பறக்கவில்லை என்றும் பெங்களூரில் உள்ள எச்ஏஎல் அமைப்பு தெரிவித்துள்ளது. அதே போன்று, மாநிலத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை அமைப்பின் அதிகாரிகள், பெங்களூரு நகரில் பூகம்பம் ஏற்படவில்லை என்றும் எனவே இந்த சத்தத்திற்கும் பூகம்பத்திற்கும் தொடர்பு இல்லை என்று தெரிவித்தனர்.

இதனிடையே சத்தம் குறித்து கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையத்தில் விஞ்ஞான அதிகாரியாக இருக்கும் ஜகதீஷ் கூறுகையில், இந்த ஒலி எந்த நில அதிர்வு அசைவுகளாலும் ஏற்படவில்லை என்று கூறியிருக்கிறார். நில அதிர்வு காரணத்தினால் இந்த சத்தம் மற்றும் அதிர்வுகள் ஏற்படவில்லை என்றால், வான்வழி இயக்கம் மட்டுமே ஒரே சாத்தியமாக இருக்கக் கூடும் என்று அவர் மேலும் கூறியிருக்கிறார். ஆனால், அதற்கான அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் ஏற்பட்ட அமானுஷ்யமான சத்தத்தை போல் வேறு எங்கையும் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளதா என்று ஆராய்ந்தபோது, இதேபோன்ற சத்தம் ஆஸ்திரேலியாவின், கான்பெர்ரா வடக்கில் உள்ள பெல்கொன்னென் மற்றும் குங்காஹ்லின் ஆகிய இடங்களில் இன்று கேட்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பெங்களுருவை மிரட்டிய மர்ம சத்தம் குறித்து நெட்டிசன்கள் உருவாக்கிய மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories