April 19, 2025, 3:59 AM
29.2 C
Chennai

வெட்டுக்கிளிகள் படை எடுக்கும்னு பஞ்சாங்கத்துல முன்னாடியே எச்சரிச்சாங்க..!

vettukkili panchangam
vettukkili panchangam

கொரோனாவுக்கு அடுத்து இப்போது இந்தியாவை பெரிதும் அச்சுறுத்தி வருபவை, வெட்டுக்கிளிகள் கூட்டம். இவற்றினால், கர்நாடகா உள்ளிட்ட மேலும் 12 மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.

வெட்டுகிளிகள் பெரிய அளவில் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருகின்றன. இவை, விளைச்சலுக்கு நிற்கும் பயிர்களை உண்டு, விவசாயிகளை பெரிதும் துயரத்தில் ஆழ்த்துகின்றன. பல ஆண்டுகளாகவே வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு அவ்வப்போது நடைபெற்றுதான் வருகிறது. மத்திய ஆசிய நாடுகளான ஈரான் உள்ளிட்ட பாலைவன நாடுகளில் இருந்து உருவாகும் இந்த வெட்டுக்கிளிகள் ஒரே நாளில் 150 கிமீ., தொலைவுக்கு பயணிக்கும் ஆற்றல் கொண்டவை.

இந்த பாலைவன வெட்டுக் கிளிகள் உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், பஞ்சாப் என இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் படையெடுத்து உணவுப் பயிர்களையும் தாவர இனங்களையும் நாசம் செய்து வருகின்றன. இந்த வெட்டுக்கிளிகளின் தாக்குதல் இப்போது விவசாயிகளுக்கு பெரும் வேதனையை அளித்து வருகிறது.

ALSO READ:  பாரதத்துடன் சம கால கலாசாரச் செழுமை கொண்ட சீனாவுடன் நல்ல தொடர்பில் இருப்போம்: பிரதமர் மோடி!
vettukkili
vettukkili

இதை அடுத்து, வெட்டுக்கிளி களை கட்டுப் படுத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு உதவவும் மத்திய வேளாண் அமைச்சகம் முடிவு செய்துள்ளது. வெட்டுக் கிளிகளால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அவற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்படுகின்றன.

இந்தப் பணிக்காக 89 தீயணைப்பு படைகள், 120 கண்காணிப்பு சாதனங்கள், ஸ்பிரே சாதனத்துடன் கூடிய 47 கட்டுப்பாட்டு வாகனங்கள் மற்றும் 810 டிராக்டர்கள் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளன.

vettukilikal
vettukilikal

வட மாநிலங்களைக் கடந்து, கர்நாடகா, தெலங்கானா ஆகிய தென் மாநிலங்களிலும், உத்தராகண்ட், ஹரியாணா, இமாச்சல பிரதேசம், தில்லி உள்பட மேலும் 12 மாநிலங்களிலும் வெட்டுக்கிளிகளின் தாக்கம் இருக்கும் என்று மத்திய விவசாய அமைச்சகம் எச்சரிக்கை செய்துள்ளது.

ஜூன் 15-ஆம் தேதிக்குப் பின்னர் இந்த மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், இந்த மாநிலங்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது மத்திய விவசாய அமைச்சகம்!

vettukkili
vettukkili

இதனிடையே, வெட்டுக்கிளிகள் தாக்கும் என்று இந்த வருடம் பஞ்சாங்கத்தில் முன்னமேயே கணித்துக் கூறப் பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறுகின்றனர் சமூகத் தளங்களில்!

ALSO READ:  ஏப்.7ல் திட்டமிட்டபடி தென்காசி கோயில் கும்பாபிஷேகம்! நீதிமன்ற தடை நீக்கம்!

இந்த வருட பஞ்சாங்கங்களில் தெரிவிக்கப் பட்ட தகவல்கள்…. வெட்டுக் கிளிகள் கூட்டம் கூட்டமாக வந்து கோதுமை பயிர்களை நாசம் செய்யும் என்றும் அடிக்கடி வெடிச்சத்தம் ஏற்பட்ட வண்ணம் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது

vettukili panchangam
vettukili panchangam

இன்னொரு பஞ்சாங்கத்தில் இவ்வாண்டு வெட்டுக்கிளி பூச்சிகள் ரீங்காரம் செய்தலும் தவளைகள் கத்துதலும் செங்கல்சூளை நன்றாக நடப்பதும் மருத்துவர்களுக்கு அடிக்கடி ஊக்கத்தொகை கிடைப்பதும் நல்ல யோக பலனும் வானத்தில் ஒரு புதிய நட்சத்திரம் ஆடி மாதம் பத்தாம் தேதி சனிக்கிழமை கிழக்கில் உதயமாகி மறைதலும் இதனால் மின்காந்த அலை பாதித்து வான்வழி போக்குவரத்து ஒரு பிரச்சனை உண்டாகும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இன்னொரு பஞ்சாங்கத்தில் வெட்டுக்கிளி பூச்சிகளால் கடும் பாதிப்பு ஏற்படும் நஞ்சை புஞ்சை செழிப்படையும் இந்த சார்வரி ஆண்டு என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்.19 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: ஹைதராபாத் அணியை எளிதாக எதிர்கொண்ட மும்பை அணி!

          ஆட்டநாயகனாக ஆல்ரவுண்டர் வில் ஜேக்ஸ் தான் எடுத்த 2 விக்கட்டுகளுக்காகவும் அதிரடி 36 ரன் களுக்காகவும் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழர்கள் சொத்தை அபகரிக்கத் துடிக்கும் வக்ப் வாரியம்: இந்து முன்னணி கண்டனம்!

இந்துக்களின் பராம்பரிய சொத்துக்களை பாதுகாக்க இந்திய பாராளுமன்றம் நிறைவேற்றிய வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசை

IPL 2025: சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

ஐ.பி.எல் 2025 – டெல்லி vs ராஜஸ்தான் டெல்லி - 16.04.2025 சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

Topics

பஞ்சாங்கம் ஏப்.19 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: ஹைதராபாத் அணியை எளிதாக எதிர்கொண்ட மும்பை அணி!

          ஆட்டநாயகனாக ஆல்ரவுண்டர் வில் ஜேக்ஸ் தான் எடுத்த 2 விக்கட்டுகளுக்காகவும் அதிரடி 36 ரன் களுக்காகவும் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழர்கள் சொத்தை அபகரிக்கத் துடிக்கும் வக்ப் வாரியம்: இந்து முன்னணி கண்டனம்!

இந்துக்களின் பராம்பரிய சொத்துக்களை பாதுகாக்க இந்திய பாராளுமன்றம் நிறைவேற்றிய வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசை

IPL 2025: சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

ஐ.பி.எல் 2025 – டெல்லி vs ராஜஸ்தான் டெல்லி - 16.04.2025 சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IPL 2025: தூள் கிளப்பிய பஞ்சாப் அணி

ந்த ஆண்டு ஐபிஎல் பேட்ஸ்மென்களின் சொர்க்கமாக விளங்குகிறது. 150 ரன்னுக்கும் குறைவான ஆட்டங்கள் வெகு சிலவாக உள்ளன. மட்டையாளர்கள் பந்துவீச்சாளர்களை வெளுவெளு என்று வெளுக்கிறார்கள்.

மு.க. ஸ்டாலினுக்கு மாநில சுயாட்சி ஜுரம்!

முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு மீண்டும் மாநில சுயாட்சி ஜுரம் பிடித்திருக்கிறது. திமுக தலைவர்களின் உள்ளே இருக்கும் வேறு கோளாறின் அறிகுறியாக அவர்களுக்கு அவ்வப்போது மாநில சுயாட்சி ஜுரம் வரும்.

Entertainment News

Popular Categories