பெட்ரோல் விலை நிர்ணயம் தினசரி காலை 6 மணிக்கு மாறுகிறது: பங்க் போராட்டம் வாபஸ்

Petrol-bunk-strike

நாளை முதல் பெட்ரோல் விலை நிர்ணயம் தினசரிக்கு மாறுகிறது. நாள்தோறும் காலை 6 மணிக்கு பெட்ரோல் விலை நிர்ணயம் செய்ய மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தற்போது மாதந்தோறும் இரண்டு முறை, அதாவது 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. மாதத்தின் முதல் நாள் மற்றும் 16-ம் தேதி வாக்கில் இந்த மாற்றம் செய்யப்படுகிறது. இதனையடுத்து, இந்த நடைமுறையை மாற்றி நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நடைமுறை ஜூன் 16-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலை மாற்றி அமைக்கப்படும் என்று அறிவிப்புக்கு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் ஜூன் 16-ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர். ஜூன் 16-ம் தேதி முதல் பெட்ரோல் வாங்கவோ, விற்கவோ மாட்டோம் என்று அறிவித்தனர் இதனிடையே, எண்ணெய் நிறுவன அதிகாரிகள் மற்றும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. அப்போது, நள்ளிரவு 12 மணிக்கு பதிலாக காலை 6 மணிக்கு விலை நிர்ணயம் செய்யப்படும் என்று மத்திய அரசு ஒப்புக் கொண்டதை அடுத்து, பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவித்திருந்த வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

தினசரி விலை நிர்ணய முறை ஏற்கனவே 5 நகரங்களில் மே ஒன்றாம் தேதி முதல் நடைமுறையில் உள்ளதாகவும், தற்போது அது விரிவாக்கம் மட்டுமே செய்யப்படுவதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories