காங்கிரஸ் தலைவராக பிரியங்கா வதேரா?: சல்மான் குர்ஷித் பதில்

Published:

ராகுல் காந்தி சில நாட்களாக தீவிர அரசியலில் இருந்து விலகியிருக்கும் நிலையில் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவராக முன்நிறுத்தப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகி வருகின்றன,. இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் திருமண நிகழ்ச்சிக்காக வந்திருந்த முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான சல்மான் குர்ஷித்திடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அப்போது அவர், “பிரியங்காவை தலைவர் ஆக்குவதா வேண்டாமா என்பதை கட்சி மேலிடமே முடிவு செய்யும்” என்று கூறிச் சென்றார். அவரது பதிலில் இருந்து அதற்கான வாய்ப்பு இருக்கலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.

Related articles

Recent articles

spot_img