
புது தில்லி :
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார், ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன். அவர் தற்போது கோல்கத்தா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கர்ணன் சார்பில் ஜாமீன் கோரியும், தனக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரிக்க எடுத்த உச்ச நீதிமன்றம், ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனின் ஜாமீன் மனுவை விசாரிக்க முடியாது. அவர் 6 மாத சிறை தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும். 6 மாத சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது என உறுதிபடத் தெரிவித்தது.
முன்னதாக, கர்ணன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவையும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்திருந்தது.


