December 6, 2025, 10:29 AM
26.8 C
Chennai

வென்டிலேட்டரை அகற்றி விட்டனர்.. மூன்று மணி நேரமாக கேட்கிறேன்.. சுவாசிக்க முடியவில்லை.. பை அப்பா பை..! இறக்கும் முன் வீடியோ அனுப்பிய மகன்!

deadbody

ஹைதராபாத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர் கோவிட் -19 பாதிப்பால் இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு மருத்துவமனை படுக்கையில் இருந்து தனது தந்தைக்கு ஒரு செல்ஃபி வீடியோவை அனுப்பியுள்ளார்.

அதில் வென்டிலேட்டரை மருத்துவர்கள் நீக்கியதால் தனக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறியுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டதை அடுத்து, ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

அந்த வீடியோவில் இளைஞர், “அவர்கள் வென்டிலேட்டரை அகற்றிவிட்டனர், ஆக்சிஜனை வழங்குமாறு கடந்த மூன்று மணி நேரமாக நான் கூறியதற்கு அவர்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை. என் இதயம் நின்றுவிட்டது, நுரையீரல் மட்டுமே வேலை செய்கிறது, என்னால் சுவாசிக்க முடியவில்லை, அப்பா பை அப்பா. அனைவருக்கும் பை, அப்பா” என்று கூறியுள்ளார்.

வீடியோ அனுப்பிய சில நிமிடங்களில் தனது மகன் இறந்துவிட்டதாக அவரது தந்தை கூறினார். அவரது இறுதிச் சடங்குகள் சனிக்கிழமை நிகழ்த்தப்பட்டன. “எனது மகன் ஜூன் 24 ஆம் தேதி அன்று அதிக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். ஒரு சில மருத்துவமனைகளில் அனுமதிக்க முயன்ற பின்னர், இறுதியாக ஜூன் 24 அன்று செஸ்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவர் ஜூன் 26 ஆம் தேதி அன்று இறந்தார்” என்று உயிரிழந்த இளைஞரின் தந்தை கூறியுள்ளார்.

வென்டிலேட்டர் அகற்றப்பட்டது என்ற குற்றச்சாட்டை செஸ்ட் மருத்துவமனை கண்காணிப்பாளர் மஹ்பூப் கான் மறுத்துள்ளார். வென்டிலேட்டர் பயன்பாடு அங்கு அதிகமாக இருந்தது என்றும் ஆனால் நோயாளி ஆக்ஸிஜன் விநியோகத்தை உணர முடியாத அளவுக்கு ஒரு முக்கியமான கட்டத்தில் இருந்தார் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர், “திடீரென இதயம் சரியாக வேலை செய்யாத காரணத்தினால் அந்த இளைஞன் இறந்தார். கடந்த சில நாட்களில் இதுபோன்ற பல நோயாளிகளை நாங்கள் சந்தித்துள்ளோம்.

வயதான கோவிட் -19 நோயாளிகள் நுரையீரல் பாதிக்கப்பட்டு இறக்கின்றனர். ஆனால் 25-40 வயதுடையவர்கள் இறக்கும் போது ஒரு புதிய நிகழ்வை நாங்கள் காண்கிறோம்.

அவர்களுக்கு இதயத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. அவர்களுக்கு ஆக்ஸிஜன் வழங்கப்படுகிறது, ஆனால் அது போதுமானதாக இல்லை என்று அவர்கள் உணர்கிறார்கள்.

அந்த நபரைக் காப்பாற்ற மருத்துவர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்தனர். ஆனால் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் அவர் ஆபத்தான நிலையில் இருந்தார். மருத்துவர்கள் மீது எந்த தவறும் இல்லை” என்றும் கூறினார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories