கொரோனா: நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க புதிய வடிவில் ஆரோக்கிய சந்தேஷ் அறிமுகம்!

sandesh

கொரோனா தொற்றுக்கு எதிராக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, இயற்கையான தேனில் தயாரான ‘ஆரோக்ய சந்தேஷை’ சந்தைப்படுத்த மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது

வட இந்தியாவில் சந்தேஷ் மிகவும் பிரபலமான இனிப்பு. இந்த இனிப்பை செய்வது மிகவும் எளிமையானது.

தேவையான பொருட்கள் :

முழு க்ரீம் உள்ள பால் – 1 லிட்டர்
எலுமிச்சைப் பழச்சாறு – 1 டேபிள்ஸ்பூன்,
தூளாக்கிய சர்க்கரை – 1/8 கப்,
பிஸ்தா, பாதாம் – 2 டேபிள்ஸ்பூன்,
குங்குமப்பூ – சிறிதளவு.

செய்முறை:
பாலை கொதிக்க வைத்து அதில் எலுமிச்சைச்சாறை கலக்கவும். பால் திரித்து தண்ணீர் தனியே நிற்கும். அடிப்பிடிக்காமல் இருக்க தொடர்ந்து கிளறவும். தண்ணீர் பிரிந்து தனியே வரும் வரை கிளறவும். இந்தப் பன்னீரை மஸ்லீன் துணியில் கட்டி 30 நிமிடங்கள் தொங்கவிடவும்.

அப்போது மீதமுள்ள தண்ணீரும் வெளியேறி விடும். இந்த பன்னீரை எடுத்து எலுமிச்சையின் புளிப்பு தன்மை போகும் வரை தண்ணீரில் சுத்தம் செய்யவும். தண்ணீர் இருந்தால் பிழிந்து எடுத்து விடவும். பிறகு பன்னீருடன் தூளாக்கிய சர்க்கரை சேர்த்து மிருதுவான விழுதாக அரைத்து கொள்ளவும். அரைத்த விழுதை ஒரு நான்ஸ்டிக் தவாவில் போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும்.

முதலில் விரல்களில் ஒட்டிக் கொண்டு வரும். பிறகு ஒட்டாததாக மாறிவிடும். ஒட்டாத பதத்துக்கு வந்ததும் குங்குமப்பூ சேர்த்து கலந்து வைக்கவும். இந்த குங்குமப்பூ ஒட்டாத பதத்துக்கு வந்ததும் அதன் நிறம் மாறும். பிறகு இதை ஒரு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்.

இது மிதமான சூட்டில் இருக்கும் போது தட்டையாக கைகளால் தட்டி, மேலே பிஸ்தா, பாதாம் கொண்டு அலங்கரிக்கவும்

இவ்வாறு தயாரிக்கப்படும் சந்தேஷ் இனி ஆரோக்கியம் தரும் வகையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வகையில் துளசி தேன் சேர்த்து தயாரிக்கப்பட உள்ளது

பசும்பாலில் இருந்து தயாரிக்கப்படும் பாலாடை கட்டியை, சுந்தர்பன் காடுகளில் இருந்து தருவிக்கப்படும் சுத்தமான தேனுடன் கலந்து ஆரோக்கிய சந்தேஷ் தயாரிக்கப்படவுள்ளது.

இதனுடன் துளசி இலைகளின் சாறும் சேர்க்கப்படுமென மேற்கு வங்க கால்நடை வள மேம்பாட்டுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் எந்தவித செயற்கையான பொருட்களும் சேர்க்கப்படாமல் தயாராகும் இனிப்பு பண்டத்தை நகரங்கள் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களின் விற்பனை நிலையங்களில் கிடைக்குமெனவும், சந்தேஷ் ஒட்டுமொத்தமாக உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

ஆனால் இது கொரோனா தொற்றுக்கு மாற்று மருந்து அல்ல.சந்தேஷ் இன்னும் இரண்டு மாதங்களில் சந்தைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை சாதாரண மக்களும் வாங்க கூடியதாக இருக்குமென அவர் கூறினார்.

அமைச்சர் மந்துராம் பக்கிரா கூறுகையில், ‘ஆரோக்ய சந்தேஷை’ தயாரிப்பதற்கான தேன், பிர்காலி, ஜார்காலி மற்றும் சுந்தர்பன்ஸின் பிற பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும். அது அறிவியல் முறையில் சேமிக்கப்படும்’ என்றார்.

இம்மாத துவக்கத்தில் கோல்கட்டாவை சேர்ந்த பிரபல ஸ்வீட் தயாரிப்பு நிறுவனம், ‘இம்யூனிட்டி சந்தேஷ்’ என்ற இனிப்பு பண்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மஞ்சள், துளசி, குங்குமப்பூ, மற்றும் ஏலக்காய் மற்றும் இமயமலை தேன் போன்ற பல்வேறு மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் சேர்க்கப்பட்டிருந்தது. இது கொரோனாவை எதிர்த்து போராட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என கூறப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories