370வது சட்டப் பிரிவை நீக்குங்கள்; காஷ்மீர் இந்தியாவின் அங்கம் என ஒரே வாரத்தில் உலகம் உணரும்: சிவசேனா

uddhav thackeray - 2026

மும்பை:

காஷ்மீர் குறித்த சிறப்புப் பிரிவு 370வது சட்டப் பிரிவை நீக்குங்கள், அப்போது காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கம் என ஒரே வாரத்தில் உலகம் உணர்ந்து கொள்ளும் என்றும், அமர்நாத் யாத்திரையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுடன் போரிட பசு பாதுகாவலர்களை அனுப்புங்கள் எனவும் சிவசேனா கட்சி காட்டமாக விமர்சித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் அதிகார பூர்வ பத்திரிகையான சாம்னாவில் வெளியான கட்டுரையில்,

‘இதுபோன்ற தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தப் போவது யார்? பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு வெற்றுத் தாள்களில் கண்டனம் தெரிவித்துவிட்டு, வெறுமனே கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தால் போதுமா? காஷ்மீரில் செயல்பட்டு வரும் அரசு முற்றிலும் செயலிழந்து விட்டது. காஷ்மீரில் நடந்து வருபவை எல்லாம் நாட்டின் ஒற்றுமைக்கு ஆபத்தைத்தான் விளைவிக்கும். காஷ்மீரில் பயங்கரவாதிகள் வன்முறையில் ஈடுபடுகின்றனர், பயங்கரவாதச் செயல்களை நடத்தி வருகின்றனர். தற்போது காஷ்மீரில் நடக்கும் பயங்கரவாதச் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 56 இஞ்ச் மார்பளவு கொண்டவரின் அரசு தேவைப்படுகிறது.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

பாகிஸ்தானுக்கும் பயங்கரவாதிகளுக்கும் கடும் எச்சரிக்கை விடவேண்டும். காஷ்மீரில் சட்டப்பிரிவு 370ஐ நீக்கி விட்டால் போதும், ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத மாநிலம் என்பதை ஒரே வாரத்தில் உலகம் உணர்ந்து கொள்ளும்’ என்று கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே கூறுகையில், ‘மத்தியில் ஆள்பவர்கள், விளையாட்டு, கலாசாரம் போன்ற விவகாரங்களுக்கு அரசியல் சாயம் பூச வேண்டாம் என்கின்றனர். ஆனால் இப்போது மதம் மற்றும் அரசியல் விவகாரங்களில்தான் பயங்கரவாதத் தாக்குதல் அதிகரித்து வருகிறது. மாடுகளை இறைச்சிக்காகக் கொண்டு செல்பவர்களைக் கண்டுபிடித்து அவர்களிடம் இருந்து மாடுகளைப் பறிமுதல் செய்து வரும் பசுப் பாதுகாவலர்களை, அமர்நாத் யாத்திரையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுடன் போரிட ஏன் அனுப்பக் கூடாது?’’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதுபோல், சிவசேனா கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் கூறுகையில், அமர்நாத் யாத்திரையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் பக்தர்கள் மீது நடத்தப்பட்டதல்ல. ஒட்டுமொத்த நாட்டின் மீதும், மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜக., மீதும் நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். இந்தத் தாக்குதலுக்கு கடும் பதிலடி கொடுக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ:  வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

முன்னதாக, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட பாஜக., ‘பிரதமர் பதவிக்குப் போட்டியிடும் மோடி 56 இஞ்ச் மார்பளவு கொண்டவர். அதனால் அவர் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவார்’ என பிரசாரம் செய்தது.

அதை அடுத்து தேர்தலில் பாஜக., வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. அதன் பின்னர், அண்டை நாடான பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், 56 இஞ்ச் மார்பளவு கொண்ட பிரதமர் அந்தத் தாக்குதலை உடனே தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் அமர்நாத் யாத்திரீகர்கள் மீது, பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் பக்தர்கள் 7 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 19 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில்தான், பாஜக.,வுடன் கூட்டணி வைத்துள்ள சிவசேனா, தனது கட்சி பத்திரிகையான ’சாம்னா’வில், இவ்வாறு காட்டமாக மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக.,வை விமர்சித்துள்ளது.

ALSO READ:  தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

Entertainment News

Popular Categories