இந்தியா திறமைகளின் அதிகார மையம்: பிரதமர் மோடி பெருமிதம்!

modiji
modiji

இந்தியா திறமைகளின் அதிகார மையம் என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இந்தியா குளோபல் வீக் என்ற கருத்தரங்கின் துவக்க விழாவில் பிரதமர் மோடி பேசினார். மறுமலர்ச்சி இந்தியா மற்றும் சிறந்த புதிய உலகம் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இன்று முதல் 3 நாள் நடைபெறும் கருத்தரங்கில் 30 நாடுகளை சேர்ந்த 5000 பேர் பங்கேற்றுள்ளனர்.

இந்தியா திறமைகளின் அதிகார மையம் – பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியா குளோபல் வீக் என்ற கருத்தரங்கு தொடக்க விழாவில் பிரதமர் மோடி பேசினார். பிரதமர் மோடி, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

ஈஷா மைய நிறுவனர் சத்குரு, வாழும் கலை அமைப்பின் ஸ்ரீ ரவிசங்கர் ஆகியோர் மூன்று நாள் கருத்தரங்கில் உரை நிகழ்த்துகின்றனர். பல்வேறு நாடுகளைச் சார்ந்த தொழில் – வர்த்தக துறை அதிபர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, நாடு இன்று இருக்கும் சிக்கலான நேரத்தில் மறுமலர்ச்சியை பற்றி பேசுவது இயற்கை. உலக அளவில் இந்தியர்களின் திறமையின் பங்களிப்பை உலகம் கண்டிருக்கிறது. இந்தியா திறமைகளின் அதிகார மையம் என்று பிரதமர் மோதி பெருமிதம் தெரிவித்தார்.

இந்திய தொழில்நுட்பத் துறையையும் தொழில்நுட்ப வல்லுநர்களையும் யார் மறக்க முடியும் என்று கூறிய பிரதமர் மோதி, இந்தியர்கள் பல பத்தாண்டுகளாக வழி காட்டி வருகின்றனர் என்றும், பங்களிப்பு செய்ய ஆர்வமுள்ள திறமைகளின் சக்தி வீடு இந்தியா என்றும் பெருமிதத்துடன் கூறினார்.

ஒருபுறம் இந்தியா உலகளாவிய தொற்றுநோய்க்கு எதிராக ஒரு வலுவான போரை நடத்துகிறது; கடந்த ஆறு ஆண்டுகளில் தொழில் துவங்க எளிதான சூழல் உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. எதையெல்லாம் அசாத்தியம் என்று நம்பப்படுகிறதோ… அவற்றை சாத்தியமாக்கி காட்டுவதற்கான திறமை இந்தியாவுக்கு இருக்கிறது என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தியாவில் வளர்ந்து வரும் பல்வேறு துறைகளில் முதலீடுகள் காண வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன என்று கூறிய மோதி, தொற்றுநோய்க்கு எதிரான போரை நடத்திக் கொண்டு பொருளாதார சீர்திருத்தத்தை மேற்கொள்கிறோம். என்றார்.

மேலும், சிறு குறு தொழில் மேம்பாட்டுக்கு ஏராளமான நடவடிக்கைகள் எடுத்துள்ளோம்… என்றும், கடந்த 6 ஆண்டுகளில் வரி சீர்திருத்தம் உள்ளிட்ட துறைகளில் இந்தியா அதிக லாபம் ஈட்டியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

சுய சார்பு இந்தியா திட்டத்தின் மூலம் உள்ளூர் உற்பத்தி பொருட்களை அதிகளவில் ஏற்றுமதி செய்யும் திட்டம் உள்ளது… என்று கோடிட்டுக் காட்டிய பிரதமர் மோதி, சுயசார்பு பாரத திட்டம் உள்ளூர் உற்பத்தியை சர்வதேச சந்தைக்கு எடுத்துச் செல்ல உதவும் என்றார்.

நமஸ்தே எனப்படும் வணக்கம் தெரிவிக்கும் முறை கொரோனா காலத்தில் உலக நாடுகளை சென்றடைந்துள்ளது என்று முத்தாய்ப்பாகத் தெரிவித்தார் பிரதமர் மோதி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

Topics

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

Entertainment News

Popular Categories