குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு தமிழகத்தில் முடிந்தது

Published:

அஇஅதிமுக (புரட்சித் தலைவி அம்மா) நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்தனர்.
அஇஅதிமுக (புரட்சித் தலைவி அம்மா) நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்தனர்.

சென்னை:
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் விறு விறுவென முடிந்தது. இன்று காலை முதலே 10 மணிக்குத் துவங்கி வாக்குப் பதிவு நடைபெற்றது. முதலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வக்குப் பதிவு செய்தார். தொடர்ந்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சிறப்பு அனுமதியின் பேரில் சென்னை சட்டப்பேரவை வளாகத்திலேயே வாக்களித்தார். கேரள மாநில முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவரும் பின் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வாக்களிக்க, வாக்குப் பதிவு முற்பகலிலேயே நிறைவடைந்தது.

அஇஅதிமுக (புரட்சித் தலைவி அம்மா) நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்தனர்.

Related articles

Recent articles

spot_img