ஹரியானா தேவாலயத் தாக்குதல் தொடர்பில் ஒருவர் கைது

Published:

சண்டிகர்: அரியானா மாநிலத்தில் ஹிஸ்ஸார் அருகே கட்டப்பட்டு வந்த கிறிஸ்துவ தேவாலயம் ஒன்று, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு குழுவால் சேதப் படுத்தப் பட்டது. அங்கிருந்த சிலுவைக்கு பதிலாக அனுமன் சிலையை அங்கு வைத்துச் சென்றதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து தேவாலயத்தின் பாதிரியார் சுபாஷ் சந்த் அளித்த புகாரில், வழக்குப் பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், இது தொடர்பாக அனில் கோத்ரா என்ற முக்கியக் குற்றவாளியை இன்று போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வருகின்றனர். முன்னதாக, இந்தச் சம்பவம் குறித்து அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். நேற்று சட்டப் பேரவையில் இது குறித்து விளக்கம் அளித்தபோது, தேவாலயம் சட்ட விரோத நிலத்தில் கட்டப்பட்டுள்ளது. அந்த மதகுருவுக்கும் சில உள்ளூர் நபர்களுக்கும் இடையே வாய்ச்சண்டை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக இந்த தேவாலயம் தாக்கப்பட்டது என்று தெரிவித்திருந்தார்.

ALSO READ:  எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img