வெள்ளத்தினால் வீட்டின் சமையலறைக்குள் தஞ்சமடைந்த புலி!

tiger

அசாமில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு வீட்டின் சமையலறையில் தஞ்சமடைந்த வங்கப் புலியை 7 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

அசாமில் பெய்த கன மழையால் கடந்த 15 நாட்களில் இரண்டாவது முறையாக அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காசிரங்கா தேசிய பூங்காவை முற்றிலுமாக வெள்ளநீர் ஆக்கிரமித்துள்ளது. பெருக்கெடுத்து ஓடும் மழை நீரில் ஏராளமான வனவிலங்குகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. அப்படி மழை நீரில் அடித்து செல்லப்பட்ட வங்கப்புலி ஒன்று போரா என்பவரின் வீட்டின் சமையலறையில் தஞ்சமடைந்தது.

சமையலறையில் புலி இருப்பதை கண்ட போரா அதன் நிலை கண்டு பரிதாபமடைந்தார். உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து வீட்டில் இருந்த 11 பேரும் வெளியேற்றப்பட்டனர். பட்டாசுகள் வெடித்தும், ஒலி எழுப்பியும் புலியை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. எதற்கும் அசைந்து கொடுக்காத புலி அதே இடத்தில் பிடிவாதமாக படுத்திருந்தது.

இரண்டாம் கட்ட முயற்சியாக மயக்க ஊசி செலுத்தி புலியை பிடிக்க திட்டமிடப்பட்டது. எங்கும் நகராமல் ஒரே இடத்தில் புலி படுத்து கிடந்ததால் மயக்க ஊசி செலுத்தி அதனை பிடிக்கும் முயற்சி வெற்றியில் முடிந்தது. பாதுகாப்பாக மீட்கப்பட்ட வங்கப்புலி வனவிலங்குகளுக்கான மறுவாழ்வு மையத்தில் சிகிச்சையில் உள்ளது.

காசிரங்கா பூங்காவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 66 விலங்குகள் உயிரிழந்துள்ளன. இதில் 12 விலங்குகள் சாலையை கடக்கும் பொழுது விபத்தில் சிக்கி உயிரிழந்தன. 3 வங்கப் புலிகள் உட்பட 170 விலங்குகளை வனத்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories