கொரோனா: சமூக பரவலானது ஒத்துக்கொண்ட கேரள முதல்வர்!

pinarayi vijayan

கேரள திருவனந்தபுர பகுதிகளில் கொரோனா சமூக தொற்றாக பரவ ஆரம்பித்திருப்பதாக, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உறுதிபடுத்தியுள்ளார்.

கேரள தலைநகரான திருவனந்தபுரம் அருகேயுள்ள புல்லுவிலா, பூந்துரா ஆகிய கிராமங்களில் கடந்த சில நாட்களாக அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது, கேரளாவிலுள்ள அனைத்து மாவட்டங்களுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அதன் தலைநகரான திருவனந்தபுரம்தான் கடுமையான சமூகப்பரவலை எதிர்கொண்டுள்ளது. அதற்கடுத்து, எர்ணாகுளம் உள்ளது. இதுவரை, 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

புல்லுவிலாவில் பரிசோதிக்கப்பட்ட 97 பேரில் 57 பேருக்கும், பூந்துராவில் பரிசோதிக்கப்பட்ட 50 பேரில் 26 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மட்டுமே 246 புதிய ‘பாசிட்டிவ்’ கேஸ்கள் பதிவாகியுள்ளன. அதில், 4 பேர் சுகாதாரத்துறையைச் சேர்ந்த பணியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்தில், கேரளாவின் கொரோனா நடவடிக்கைகளை மற்ற மாநில மக்கள் முதல் உள்ளூர் மக்கள் வரை பாராட்டிக் கொண்டிருந்தார்கள். இப்போதும், சமூக பரவல் உள்ளது என்பதை ஒப்புக்கொண்டு அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் பினராயி விஜயன்.

சமூக பரவல் குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசியவர்,

“கொரோனா பாதிப்பு இன்னும் யாருக்கெல்லாம் உள்ளது என்பது கண்டுபிடிக்கப்படாமல் இருக்கிறது. கடலோர கிராமங்களில் முழுமையான ஊரடங்கு இருக்கும். திருவனந்தபுரத்திலுள்ள கரையோர பகுதிகள் தனி மண்டலமாக அறிவித்து கடுமையாக கண்காணிக்கப்படும். அங்கிருந்து யாரும் மற்ற மாவட்டங்களுக்குச் செல்லக்கூடாது” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Topics

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Entertainment News

Popular Categories