துர்காபுர்: இந்தியாவின் முதல் தனியார் விமான நிலையம் அடுத்த மாதம் 14ம் தேதி முதல் செயல்படத் தொடங்கும் என்று தெரிகிறது. மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் இந்த விமான நிலையத்தை பிஏபிஎல் என்ற பெங்கால் ஏரோட்ரோபொலிஸ் பிராஜக்ட் லிமிடெட் என்ற நிறுவனம் தொடங்குகிறது. இந்த விமான நிலையம் அனேகமாக ஏப்ரல் மாதம் 14ம் தேதி திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துர்காபுரில் மாநில போக்குவரத்து செயலர் அலபன் பந்தோபாத்யாய கூறுகையில், புதிய விமான நிலையத்திற்கான பணிகள் நிறைவடைந்து விட்டன, மத்திய விமானப் போக்குவரத்து இயக்குனரகத்தின் ஒப்புதலை எதிர்நோக்கியுள்ளோம் என்றார். காஸி நஸ்ருல் இஸ்லாம் விமான நிலையம் என்று பெயரிடப் பட்டுள்ள இந்த விமான நிலையம், வங்க காலண்டரின்படி, வருட முதல் நாளான ஏப்ரல் 14ம் தேதி தொடங்கும் என்று அவர் தெரிவித்தார்.
Popular Categories



