பிளாஸ்மா தானத்துக்கு முன்வாருங்கள்: ஆளுநர் தமிழிசை!

Published:

dr-tamilisai-soundarrajan
dr-tamilisai-soundarrajan

பிளாஸ்மா தானம் கொடுப்பதற்கு கொடையாளிகள் முன்வர வேண்டும் என்று தெலங்காணா கவர்னர் தமிழிசை கோரிக்கை விடுத்தார்.

சனத்நகரில் உள்ள ஈஎஸ்ஐ மருத்துவமனையை பார்வையிட்ட கவர்னர் அங்குள்ள ரத்தநிதி நிலையத்தை பரிசீலித்தார். அதன்பின்பு ஊடகத்தாரோடு உரையாடுகையில் பிளாஸ்மா தானத்தினால் பலரின் உயிர் காப்பாற்றப்படுகிறது என்றார். ஆனால் அனைவரும் பிளாஸ்மாவை தானம் செய்வதற்கு வாய்ப்பு இல்லை என்றும் மருத்துவ நிபுணர்கள் யாரிடமிருந்து பெறலாம் என்று முடிவெடுப்பார்களோ அவர்களிடமிருந்து மட்டுமே பிளாஸ்மாவை சேகரிப்பார்கள் என்றும் தமிழிசை கூறினார்.

பிளாஸ்மா தானம் செய்பவர்களை ஒன்றாக ஒரு மேடையில் சேர்க்க வேண்டும் என்று கூறினார்.

கொரோனா அடையாளங்கள் இருந்தால் உடனே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கொரோனாவால் யாரும் உயிர் இழக்கக் கூடாது என்பதே என் கோரிக்கை. பிளாஸ்மா தெரபியின் மூலம் கொரோனா பாதித்தவர்களை காப்பாற்ற முடியும். ஈஎஸ்ஐ மருத்துவமனையில் பிளாஸ்மா தெரபிக்கு அனைத்து வசதிகளும் உள்ளன. கொரோனாவிலிருந்து மீண்டெழுந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய வேண்டும் என்று கோருகிறேன். அப்படிப்பட்டவர்கள் ஈஎஸ்ஐ மருத்துவ மனைக்கு செய்தி தெரிவிக்க வேண்டும் என்று தமிழிசை கூறினார்.

இந்த சந்தர்ப்பத்தில் பிளாஸ்மா தானம் செய்த சந்தோஷ் என்ற என்பவரை கவர்னர் பாராட்டினார்.

ALSO READ:  இடதுசாரிகளின் இரட்டை வேடம்: தியானமென் சதுக்கமும் ஜன்தர்மந்தரும்!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img