ரூ.2ஆயிரம் நோட்டு அச்சிடுவது நிறுத்தமா? ரூ. 200 நோட்டு அச்சடிப்பில் தீவிரம்!

- 2026

புது தில்லி:

ரூ.2000 நோட்டுக்கள் அச்சிடுவதை மைசூரு பிரின்டிங் பிரஸ் நிறுத்தி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக ரூ.200 நோட்டுக்கள் அச்சிடுவதில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. ரூ.200 நோட்டுக்கள் அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதால் ரூ.2000 நோட்டுக்கள் அச்சிடும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

370 கோடி எண்ணிக்கை அளவில் ரூ.2 ஆயிரம் நோட்டுகள், 7.4 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அச்சிடப்பட்டு வெளியில் விடப்பட்டன. அதுபோல், 1400 கோடி எண்ணிக்கை அளவில் ரூ.500 நோட்டுகள் அச்சிடப்பட்டு வெளியில் விடப்பட்டன. இந்நிலையில், நூறு கோடி எண்ணிக்கை அளவில் ரூ.200 அச்சிடும் பணி நடந்து வருவதாகவும், அது விரைவில் சுற்றுக்கு விடப்படும் என்றும் ரிசர்வ் வங்கியின் அறிக்கையை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

அண்மைக்காலமாக பல ஏடிஎம் இயந்திரங்களில் ரூ.500 தான் தாராளமாகக் கிடைத்ததே தவிர, ரூ. 2 ஆயிரம் அதிகம் தென்படவில்லை. பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின்னர், ரூ.2 ஆயிரம் நோட்டுகள் அதிக அளவில் வெளியிடப்பட்டன. தொடர்ந்து ரூ.2 ஆயிரம் அதிகம் பதுக்கியோர் பலர், வருமான வரித்துறை மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் பிடிபட்டு வந்தனர். இந்நிலையில், ரூ.2 ஆயிரம் அச்சிடுவதை நிறுத்திவிடப் போவதாக வந்த செய்திகள், மீண்டும் ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாததாக்கியது போல் ஆகிவிடுமோ என்ற அச்சம் பலருக்கும் எழுந்தது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். ரூ.2 ஆயிரம் நோட்டுகள் அச்சிடுவதை ரிசர்வ் வங்கி நிறுத்தி விட்டதா என்ற கேள்விக்கு மத்திய அரசின் பதில் தேவை எனக் கேட்டனர்.

இதனிடையில், செய்தி ஏஜென்சிகள் தகவல் படி ரூ.2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை ரிசர்வ் வங்கி முற்றிலும் நிறுத்தவில்லை என்றும், தற்போதைய ரூ.200 புழக்கத்தில் விட அதிக அளவில் தேவைப்படுவதால், மைசூர் அச்சகத்தில் அது அச்சிடப் படுவதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்

‘அருந்தமிழ் 50’ நூல் வெளியீடு

சாரல் ஆங்கில துணை இதழ் ஆசிரியர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய கவிதை தொகுப்பான அருந்தமிழ் 50 என்ற நூலை திருவான்மியூரில் உள்ள இலக்கியச் சாரல்

இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

போர்ச் சூழலிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்!

மேற்காசியப் போர் நிமித்தம் கொஞ்சம் பாதிப்பு இருந்தாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6% என நிலையாக இருக்கும்.

Topics

சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்

‘அருந்தமிழ் 50’ நூல் வெளியீடு

சாரல் ஆங்கில துணை இதழ் ஆசிரியர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய கவிதை தொகுப்பான அருந்தமிழ் 50 என்ற நூலை திருவான்மியூரில் உள்ள இலக்கியச் சாரல்

இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

போர்ச் சூழலிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்!

மேற்காசியப் போர் நிமித்தம் கொஞ்சம் பாதிப்பு இருந்தாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6% என நிலையாக இருக்கும்.

சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

சித்திரை மேஷ விஷு பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில்...

இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

இஸ்ரேலை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்ற குவாஜா ஆசிஃபின் அழைப்பு "அதிர்ச்சியளிக்கிறது" என்று பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

பிரதமர் மோடியை முடிக்க சதியா? பீகாரில் கைதானவரிடம் விசாரணை தீவிரம்!

பீகாரின் பக்ஸார் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Entertainment News

Popular Categories