புலிகள் மீதான தடை நீக்கம்: ஐரோப்பிய யூனியன் நீதிமன்ற உத்தரவால் வெளிப்படும் மகிழ்ச்சி

LTTE Flag - 2026

தீவிரவாத இயக்கங்களின் பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை ஐரோப்பிய யூனியன் தலைமை நீதிமன்றம் நீக்கியுள்ளதால், உலகெங்கிலும் உள்ள புலிகளின் ஆதரவாளர்கள் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்து வருகின்றனர்.

பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய 28 நாடுகளைக் கொண்டது ஐரோப்பிய யூனியன். ஐரோப்பிய யூனியனுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பினால் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறி, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கி ஐரோப்பிய யூனியன் தலைமை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னதாக, 2001 ஆம் ஆண்டு ஐரோப்பிய யூனியன் தீவிரவாத இயக்கங்கள், பயங்கரவாத அமைப்புகள் குறித்த ஒரு பட்டியலை வெளியிட்டது. அமெரிக்காவில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்துக்குப் பின்னர் இவ்வாறான அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் 13 தனிப்பட்ட நபர்களின் பெயர்கள் இருந்தன. மேலும், 22 அமைப்புகளின் பெயர்களும் இதில் இடம்பெற்றன. அதன் பின்னர், 2003ஆம் ஆண்டில் ஹாமஸ் அமைப்பு பயங்கரவாத பட்டியலில் இணைக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட பட்டியலில் விடுதலைப் புலிகள் அமைப்பும் சேர்க்கப்பட்டது.

இருப்பினும் 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் விடுதலைப் புலிகள் அமைப்பால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்பதை நிரூபிக்க, தகுந்த ஆதாரங்கள் எதுவும் இல்லாத காரணத்தால், விடுதலைப் புலிகள் அமைப்பு ஐரோப்பிய யூனியனின் பயங்கரவாத கறுப்புப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியனின் இந்தத் தடை விலக்கத்தால், ஐரோப்பிய நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் வங்கிப்பணமும் விடுவிக்கப்படும் என்பது குறிப்பிடத் தக்கது.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

இந்தத் தடை நீக்கத்தால், உலகெங்கும் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள், தமிழகத்தில் உள்ள புலிகள் ஆதரவு அரசியல் கட்சியினர் என பலரும் மகிழ்ச்சியைத் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories