புலிகள் மீதான தடை நீக்கம்: ஐரோப்பிய யூனியன் நீதிமன்ற உத்தரவால் வெளிப்படும் மகிழ்ச்சி

LTTE Flag - 2026

தீவிரவாத இயக்கங்களின் பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை ஐரோப்பிய யூனியன் தலைமை நீதிமன்றம் நீக்கியுள்ளதால், உலகெங்கிலும் உள்ள புலிகளின் ஆதரவாளர்கள் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்து வருகின்றனர்.

பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய 28 நாடுகளைக் கொண்டது ஐரோப்பிய யூனியன். ஐரோப்பிய யூனியனுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பினால் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறி, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கி ஐரோப்பிய யூனியன் தலைமை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னதாக, 2001 ஆம் ஆண்டு ஐரோப்பிய யூனியன் தீவிரவாத இயக்கங்கள், பயங்கரவாத அமைப்புகள் குறித்த ஒரு பட்டியலை வெளியிட்டது. அமெரிக்காவில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்துக்குப் பின்னர் இவ்வாறான அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் 13 தனிப்பட்ட நபர்களின் பெயர்கள் இருந்தன. மேலும், 22 அமைப்புகளின் பெயர்களும் இதில் இடம்பெற்றன. அதன் பின்னர், 2003ஆம் ஆண்டில் ஹாமஸ் அமைப்பு பயங்கரவாத பட்டியலில் இணைக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட பட்டியலில் விடுதலைப் புலிகள் அமைப்பும் சேர்க்கப்பட்டது.

இருப்பினும் 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் விடுதலைப் புலிகள் அமைப்பால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்பதை நிரூபிக்க, தகுந்த ஆதாரங்கள் எதுவும் இல்லாத காரணத்தால், விடுதலைப் புலிகள் அமைப்பு ஐரோப்பிய யூனியனின் பயங்கரவாத கறுப்புப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியனின் இந்தத் தடை விலக்கத்தால், ஐரோப்பிய நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் வங்கிப்பணமும் விடுவிக்கப்படும் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்தத் தடை நீக்கத்தால், உலகெங்கும் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள், தமிழகத்தில் உள்ள புலிகள் ஆதரவு அரசியல் கட்சியினர் என பலரும் மகிழ்ச்சியைத் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

‘அருந்தமிழ் 50’ நூல் வெளியீடு

சாரல் ஆங்கில துணை இதழ் ஆசிரியர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய கவிதை தொகுப்பான அருந்தமிழ் 50 என்ற நூலை திருவான்மியூரில் உள்ள இலக்கியச் சாரல்

இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

போர்ச் சூழலிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்!

மேற்காசியப் போர் நிமித்தம் கொஞ்சம் பாதிப்பு இருந்தாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6% என நிலையாக இருக்கும்.

சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

சித்திரை மேஷ விஷு பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில்...

Topics

‘அருந்தமிழ் 50’ நூல் வெளியீடு

சாரல் ஆங்கில துணை இதழ் ஆசிரியர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய கவிதை தொகுப்பான அருந்தமிழ் 50 என்ற நூலை திருவான்மியூரில் உள்ள இலக்கியச் சாரல்

இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

போர்ச் சூழலிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்!

மேற்காசியப் போர் நிமித்தம் கொஞ்சம் பாதிப்பு இருந்தாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6% என நிலையாக இருக்கும்.

சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

சித்திரை மேஷ விஷு பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில்...

இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

இஸ்ரேலை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்ற குவாஜா ஆசிஃபின் அழைப்பு "அதிர்ச்சியளிக்கிறது" என்று பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

பிரதமர் மோடியை முடிக்க சதியா? பீகாரில் கைதானவரிடம் விசாரணை தீவிரம்!

பீகாரின் பக்ஸார் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!

இதனால், 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 4 ஆம் தேதி (வியாழன் கிழமை) முதல் வகுப்புகள் தொடங்கப்படும்.

Entertainment News

Popular Categories