திருப்பதி செல்பவர்கள் கவனத்துக்கு… சித்தூர் மாவட்டத்தில் ஆக.5 வரை முழு அடைப்பு!

Published:

tirupathi-entrance
tirupathi-entrance

திருப்பதி செல்பவர்கள் கவனத்துக்கு…: திருப்பதியில்… ஆகஸ்டு 5 வரை செவ்வாய் கிழமையிலிருந்து மிக அத்தியாவசிய தேவைகளும் மெடிக்கல் ஷாப்புகளும் தவிர மீதி கடைகள் காலை 6 முதல் 11 மணி வரை மட்டுமே அனுமதி இருக்கும் என்று தெரிவித்தார்கள். அதன்பின் வாகனங்களுக்கு கூட அனுமதி இல்லை.

சித்தூர் மாவட்டத்தில் கொரோனா தலைவிரித்தாடுகிறது. தினம் தினம் அதிகரித்து வருகின்ற பாசிடிவ் கேசுகள் பயமுறுத்துகின்றன. முக்கியமாக திருப்பதியில் நிலைமை மிகவும் கொடுமையாக உள்ளது. நகரத்தில் சுமார் 1500 க்கும் மேலாக கேசுகள் பதிவாகி உள்ளன.

அதனால் அதிகாரிகள் தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் உள்ளார்கள். நிலைமையை கொஞ்சம் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு முன் எச்சரிக்கைகள் எடுத்துக் கொண்டுள்ளார்கள். அதன்படி செவ்வாய் கிழமையிலிருந்து பரிபூரண ஊரடங்கு விதிப்பதாக கலெக்டர் நாராயண பரத் குப்தா தெரிவித்தார்.

செவ்வாய் கிழமையிலிருந்து அத்தியாவசிய சேவைகளும் மெடிக்கல் ஷாப்களும் தவிர மீதி கடைகள் காலை 6 முதல் 11 வரை மட்டுமே அனுமதி இருக்கும் என்று கூறினார். அதன்பின் வாகனங்கள் கூட அனுமதிக்க மாட்டோம் என்றும் இந்த கட்டுப்பாடுகள் ஆகஸ்டு 5 வரை நீடிக்கும் என்றும் தெளிவுபடுத்தினார்.

bharath-gupta-ias
Sri Dr.N. Bharath Gupta IAS

இந்த மாதம் 31ம் தேதி அனைவரும் அமர்ந்து பேசி பாசிட்டிவ் கேசுகளின் எண்ணிக்கையை பொறுத்து லாக்டௌன் மாதிரியான உத்தரவுகளை விதிப்பதா அல்லது மீண்டும் 14 நாட்களுக்கு நீட்டிப்பதா என்பது பற்றி தீர்மானம் எடுத்தார்கள்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

சித்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தீவிரம் மிகவும் அதிகமாகி வருவதால் ஒவ்வொருவரும் நிபந்தனைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று கலெக்டர் கூறினார். ஒவ்வொருவரும் கட்டாயம் நிபந்தனைகளைக் கடைப்பிடிக்க உதவ வேண்டும் என்று எஸ்பி ரமேஷ் ரெட்டி தெரிவித்தார்.

போலீஸ் துறையிலும் கொரோனா கேசுகள் அதிகமாகி வருகின்றன என்றும் இதுவரையிலேயே இரு போலீசார் கொரோனா காரணமாக மரணித்தனர் என்றும் குறிப்பிட்டார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img