மீண்டும் எல்லையில் படைகளை குவிக்கும் சீனா!

ladak

இந்தியாவுக்கு அளித்த வாக்குறுதிகளை மீறி உண்மையான எல்லைக் கட்டுப்பாட் டுக் கோட்டுப் பகுதியில் (எல்ஏசி) 40 ஆயிரம் வீரர்களை சீனா குவித்துள்ளது தெரிய வந்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த மாதம் 15-ம் தேதி இந்தியா – சீனா ராணுவம் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்களில் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் சுமார் 40 பேர் உயிரிழந்ததாகத் தெரிய வந்ததுள்ளது. இதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே போர்ப் பதற்றம் ஏற்பட்டது. இரு நாட்டு எல்லைப் பகுதிகளிலும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர்.

எனினும், இரு நாடுகளிடையே ராணுவ ரீதியிலும், தூதரக ரீதியிலும் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தன. இதில் கடந்த மாதம் 30-ம் தேதி இருநாட்டு ராணுவ கமாண்டர்கள் நடத்திய 3-வது கட்ட பேச்சுவார்த்தையில் எல்லையில் இருந்து படைகளை திரும்பப் பெறஉடன்பாடு ஏற்பட்டது.

ALSO READ:  717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

அதைத் தொடர்ந்து கடந்த 14, 15-ம் தேதிகளில் 4-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. கிழக்கு லடாக்கில் உள்ள சுஷுல் பகுதியில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சு வார்த்தையில் பிங்கர் மற்றும் டெப்சாங் சமவெளி பகுதிகளில் இருந்து ஆயுதங்கள் மற்றும் ராணுவத் தளவாடங்களை குறைத்துக் கொள்வது குறித்து அப்போது ஆலோசிக்கப்பட்டது.

இந்நிலையில் லடாக்கிலுள்ள எல்ஏசி பகுதியில் நேற்று சீனா தனது 40 ஆயிரம் ராணுவ வீரர்களை நிறுத்தி வைத்துள்ளது தெரிய வந்துள்ளது. பேச்சு வார்த்தையில் படைகளை வாபஸ் பெறுவதாக வாக்குறுதி அளித்த பின்னரும், அப்பகுதியில் ஏராளமான ராணுவ வீரர்களை சீனா குவித்து வைத்துள்ளது இந்தியாவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஸ்பிரிங்ஸ், கோக்ரா பகுதிகளிலும் ராணுவ கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த 2 பகுதிகளும் கிழக்கு லடாக் பகுதியின் முக்கிய பகுதிகளாக அறியப்படுபவை ஆகும். இதையடுத்து பதிலுக்கு கிழக்கு லடாக்கிலுள்ள எல்ஏசி பகுதியை அடுத்த மண்ஸச்சிஸ் என்ற பகுதியில் இந்தியாவும் ராணுவ வீரர்களைக் குவித்துள்ளது.

எல்லையில் சீன ராணுவம் குவிக்கப்பட்டு இருப்பது தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

ALSO READ:  ஐபிஎல் 2026: அதிரடி ரன் குவிப்பின் ஆட்டக்களமானது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

Topics

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

இரண்டாம் சுற்றான ரவுண்ட் 32 ஜூன் 28ஆம் தேதி தொடங்கி, ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

பஞ்சாங்கம் ஜூலை 03 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories