ஐபிஎல் 2026: அதிரடி ரன் குவிப்பின் ஆட்டக்களமானது!

ipl 2026 season - 2026

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

பதிமூன்றாவது ஆட்டம் ராஜஸ்தான் vs மும்பை – கௌஹாத்தி – ஏப்ரல் 7

          முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி தொடக்க வீரர்கள் யசஸ்வீ ஜெய்ஸ்வால் (32 பந்துகளில் 77 ரன், 10 ஃபோர், 4 சிக்சர்) மற்றும் வைபவ் சூர்யவன்ஷி (14 பந்துகளில் 39 ரன், 1 ஃபோர், 5 சிக்சர்) இருவரும் சிறப்பான தொடக்கம் தந்தனர். மழை காரணமாக ஆட்டம் தாமதமாகத் தொடங்கியது. இரு அணிகளுக்கும் 11 ஓவர்கள் என அறிவிக்கப்பட்டது. அனுபவமிக்க பும்ரா ஓவர்களில் புதிய வீரர் சூர்யவன்ஷி எப்படி ஆடுவார் என்பது ஒரு பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. அந்த 15 வயது நிரம்பாத பையன் பும்ராவின் முதல் பந்தை சிக்சர் அடித்தான். முதல் ஓவரை தீபக் சாஹர் வீசினார். அந்த ஓவரில் ஜெய்ஸ்வால் 4, 6, 4, 0, 4, 4 என 22 ரன்கள் அடித்தார். அடுத்த பும்ரா ஓவரில் சூர்யவன்ஷி இரண்டு சிக்சர் அடித்தார். மூன்றாவது ஓவரை போல்ட் வீசினார். அந்த ஓவரில் ஜெய்ஸ்வால் இரண்டு சிக்சர்களும் சூர்வன்ஷி ஒரு சிக்சரும் அடித்தனர். ஐந்தாவது ஓவரில் சூர்யவன்ஷி ஷர்துல் தாகூர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் துருவ் ஜுரல் (2 ரன்) ஆட்டமிழந்தார். ஒன்பதாவது ஓவரில் ரியன் பராக் (20 ரன்) ஆட்டமிழந்தார். 11ஆவது ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 3 விக்கட் இழப்பிற்கு 150 ரன் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் ஆட்டமிழக்காமல் 77 ரன், மற்றும் ஹெட்மயர் 6 ரன் அடித்திருந்தனர்.

          ராஜஸ்தானின் இளைய வீரர்கள் ஆடிய ஆட்டத்திற்கு எதிராக அனுபவமிக்க மும்பை எப்படி விளையாடுவார்கள் என்ற எதிர்பார்ப்பொடு மும்பை இன்னிங்க்ஸ் தொடங்கியது. ரியன் ரிக்கிள்டன் (8 ரன்) முதல் ஓவரில் ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் (6 ரன்) இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார். மூன்றாவது ஓவரில் ரோஹித் ஷர்மா (5 ரன்) அவுட் ஆனார். ஹார்திக பாண்ட்யா (9 ரன்) ஐந்தாவது ஓவரில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் திலக் வர்மாவும் (14 ரன்) அவுட் ஆனார். அதிரடியாக ஆடிய ரூதர்ஃபோர்ட் (8 பந்துகளில் 25 ரன்) 8ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். அவரைப்போலவே அதிரடியாக ஆடிய நமன் தீர் (25 ரன்) 9ஆவது ஓவரில் அவுட் ஆனார். 11 ஓவர் முடிவில் மும்பை அணி 9 விக்கட்டுகள் இழப்பிற்கு 123 ரன் எடுத்துத் தோல்வியடைந்தது. ஆட்டநாயகனாக யசஸ்வீ ஜெய்ஸ்வால் அறிவிக்கப்பட்டார்.

பதிநான்காவது ஆட்டம் குஜராத் vs டெல்லி – டெல்லி – ஏப்ரல் 8

ALSO READ:  யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

          முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கட் இழப்பிற்கு 210 ரன் எடுத்தது. அந்த அணியின் தொடக்க வீரர், தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்ஷன் (12 ரன்) இன்று சரியாக ஆடவில்லை. மற்றொரு தொடக்க வீரரான அணித்தலைவர் ஷுப்மன் கில் (45 பந்துகளில் 70 ரன், 4 ஃபோர், 5 சிக்சர்), ஜாஸ் பட்லர் (27 பந்துகளில் 52 ரன், 3 ஃபோர், 5 சிக்சர்), வாஷிங்க்டன் சுந்தர் (32 பந்துகளில் 55 ரன், 6 ஃபோர், 2 சிக்சர்) ஆகியொர் சிறப்பாக ஆடியதால் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 210 ரன் எடுத்தது. இரண்டாவதாக ஆடிய  டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் பதும் நிசாங்கா (24 பந்துகளில் 41 ரன், 6 ஃபோர், 1 சிக்சர்) மற்றும் கே. எல். ராகுல் (52 பந்துகளில் 92 ரன், 11 ஃபோர், 4 சிக்சர்) இருவரும் சிறப்பான தொடக்கம் தந்தனர். அதற்குப் பின்னர் வந்தவர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். டேவிட் மில்லர் மட்டும் ஆட்டமிழக்காமல் 41 ரன் (20 பந்துகள், 3 ஃபோர், 3 சிக்சர்) அடித்தார். ஆயினும் 19.5ஆவது பந்தில் ஒரு ரன் எடுக்க அவர் தவறினார். கடைசி பந்தில் சிக்சர் அடிக்கலாம் என எண்ணியிருப்பார் போலும். கடைசிப் பந்தில் ஒரு ரன் ஓட முயல மறுமுனை மட்டையாளர் குல்தீப் யாதவ் ரன் அவுட் ஆனார். அதனால் டெல்லி அணி 1 ரன் வித்தியாசத்தில் தோற்றது.  

ALSO READ:  திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

பதினைந்தாவது ஆட்டம் கொல்கொத்தா vs லக்னோ – ஈடன் கார்டன்ஸ், கொல்கொத்தா – ஏப்ரல் 9

          எப்போதும் அதிரடியாக ஆடும் கொல்கொத்தா நைட் ரைடர் அணியின் ஆட்டக்காரர்கள் இன்று லக்னோ அணிக்கு எதிராக அதிரடியாக ஆட முடியவில்லை. இருப்பினும் அணித்தலைவர் அஜிங்க்யா ரஹானே (24 பந்துகளில் 41 ரன்), ரகுவன்ஷி (33 பந்துகளில் 45 ரன்), காமரூன் கிரீன் (24 பந்துகளில் 32 ரன்), ரோமன் போவெல் (24 பந்துகளில் 39 ரன்) ஆகியோரின் ஆட்டத்தால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கட் இழப்பிற்கு 181 ரன் எடுத்தது. இரண்டாவதாக ஆடிய லக்னோ அணியின் வீரர்களும் தொடக்கத்தில் சரியாக ஆடவில்லை. அந்த அணி 12 ஓவர்கள் முடிவதற்குள் அந்த அணி நாலு முக்கியமான வீரர்களான மிட்சல் மார்ஷ் (15 ரன்), மர்க்ரம் (22 ரன்), ரிஷப் பந்த் (10 ரன்), நிக்கோலஸ் பூரன் (13 ரன்) ஆகியோரை இழந்து விட்டது. ஆயுஷ் பதோனி (34 பந்துகளில் 54 ரன்) மற்றும் முகுல் சவுத்ரி (27 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 54 ரன்) எடுத்தனர். கடைசி ஓவரில் 14 ரன் கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் முகுல் சவுத்ரி இரண்டு சிக்சர்கள் அடித்து வெற்றிக்கு வழிகோலினார். இதனால் லக்னோ அணி வெற்றிபெற்றது.

ALSO READ:  T20 WC 2026: அரை இறுதியில் இந்திய அணி!

பதினாறாவது ஆட்டம் பெங்களூரு vs ராஜஸ்தான் – கௌஹாத்தி – ஏப்ரல் 10

          முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 10.5 ரன் ரேட்டில் 8 விக்கட் இழப்பிற்கு 201 ரன் எடுத்தது. அந்த அணியின் விராட் கோலி (16 பந்துகளில் 32 ரன்), படிக்கல் (7 பந்துகளில் 14 ரன்), ரஜத் படிதர் (40 பந்துகளில் 63 ரன்), ஷெப்பர்ட் (11 பந்துகளில் 22 ரன்), வெங்கடேஷ் ஐயர் (15 பந்துகளில் 29 ரன்) ஆகியோர் சுமாராக ஆடினர். ராஜஸ்தான் அணியின் ஆர்ச்சர், ரவி பிஷ்னோய், பிரிஜேஷ் ஷர்மா தலா 2 விக்கட்டுகள் எடுத்தனர். இரண்டாவதாக ஆடிய ராஜஸ்தான் அணியின் வைபவ் சூர்யவன்ஷி (26 பந்துகளில் 78 ரன், 8 ஃபோர், 7 சிக்சர்) மற்றும் துருவ் ஜுரல் (43 பந்துகளில் 81 ரன், 8 ஃபோர், 3 சிக்சர்) அதிரடியாக விளையாடினர். இதனால் 18 ஓவர்களிலேயே 4 விக்கட் இழப்பிற்கு 202 ரன் எடுத்து ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

Topics

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

அஸ்ஸாமில் ஆர் எஸ் எஸ் கிளைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று அந்த அமைப்பின் ஆண்டறிக்கை கூறுகிறது. வித்யா பாரதி மூலமாக அந்த மாநிலத்தில் 121 ஆரம்ப பள்ளிகளும் 115 நடுநிலைப் பள்ளிகளும் 341 மேல்நிலைப் பள்ளிகளும் நடத்தப்படுகின்றன. சுமார் இரண்டு லட்சம் மாணவர்கள் இதன்மூலம் பயன் பெறுகின்றனர்.

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

முன்பெல்லாம், அனேகமாக, எல்லோரும் பிரிவினை பேசுவார்கள். இப்போது வெகுவாக குறைந்துவிட்டது. பிரிவினைவாதத்தை எதிர்த்து பேசாமல் இருக்க காரணம் பிரிவினைவாதிகளிடம் இருக்கும் துப்பாக்கிதான். தேசியம், தேசபக்தி வளர்ந்து விட்டது என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் யாரும் சீனாவுடனோ பங்களாதேஷுடனோ இணைவதை விரும்பவில்லை

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

மோடி அரசு வந்த பிறகு மக்கள் மாறி வருகிறார்கள். பக்கத்து நாட்டில் இருந்து சட்ட விரோதமாக குடியேறும் முஸ்லிம்கள் பிரச்சனை வளர்ந்து வருகிறது. சர்சுகளும் இப்போது அந்த பிரச்சினையை பேச தொடங்கியுள்ளன. தேசபக்தி வளர்த்து வருகிறது. இந்துத்துவம் வளர்ந்து வருகிறது மேகாலயாவில். இது தெளிவாகத் தெரிகிறது.

Entertainment News

Popular Categories