தமிழகத்தை சுற்றி… ஐஎஸ் பயங்கரவாதிகள் நடமாட்டம்: எச்சரிக்கும் ஐ.நா.!

ISIS 3
ISIS 3

தென் இந்தியாவில் பெரும் அளவில் தாக்குதல் நடத்த அல்-கொய்தா சதித் திட்டம் தீட்டியிருக்கிறது என்றும், கேரளா, கர்நாடகா மாநிலங்களில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகரித்திருக்கிறது என்றும் ஐநா. அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

கேரளா, கர்நாடகா மாநிலத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் ஐஎஸ் பயங்கரவாதிகள் இருப்பதாக, ஐநா எச்சரித்துள்ளது. ஐஎஸ்ஐஎஸ், அல்-கொய்தா மற்றும் அதனுடன் தொடர்புடைய தனி நபர்கள், அமைப்புகளை கண்காணிக்கும் ஐநா.வின் பயங்கரவாத கண்காணிப்பு மற்றும் தடை குழுவின் 26வது அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதில், கூறப்பட்டுள்ள அதிர்ச்சிகரமான தகவல்கள் வருமாறு:

1. இந்திய துணைக்கண்டத்தில் அல்-கொய்தா (ஏக்யூஐஎஸ்) பயங்கரவாத அமைப்பு, ஆப்கானிஸ்தானில் உள்ள நிம்ருஸ், ஹெல்மண்ட், கந்தகார் ஆகிய மாகாணங்களில் செயல்பட்டு வரும் தலிபான் அமைப்பின் கீழ் செயல்பட்டு வருகிறது.

2. அல்-கொய்தா அமைப்பில் இந்தியா, வங்கதேசம், மியான்மர், பாகிஸ்தானை சேர்ந்த 150 முதல் 200 பயங்கரவாதிகள் உள்ளனர்.

3. ஏக்யூஐஎஸ்சின் தற்போதைய தலைவராக ஒசாமா மகமூத் உள்ளார். அசிம் உமர் இறந்ததைத் தொடர்ந்து அவர் பதவியேற்றுள்ளார்.

4. தனது முன்னாள் தலைவரின் மரணத்திற்கு பழிதீர்க்க இந்தியா உள்ளிட்ட பகுதிகளில் பதில் தாக்குதல் நடத்த அந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது.

5. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இந்தியக் கிளை (ஹிந்த் விலாயா) கடந்த ஆண்டு மே 10ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில். தனக்கு இந்தியாவில் 180 முதல் 200 பயங்கரவாதிகள் இருப்பதாகக் கூறியிருக்கிறது.

6. இந்த அமைப்பு கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பயங்கரவாதிகளைக் கொண்டுள்ளது.

7. கடந்த ஆண்டு மே மாதம் காஷ்மீரில் ராணுவத்திற்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலைத் தொடர்ந்து, ஐஎஸ் பயங்கரவாதிகள் (ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎல், தாயிஷ் என பல பெயரில் அழைக்கப்படுகின்றனர்) ‘இந்தியாவில் புதிய நிர்வாகப் பகுதியை உருவாக்கி இருக்கிறோம்’ என அறிவித்துள்ளனர்.

ஆப்கானில் வலம் வரும் 6000 பாகிஸ்தான் பயங்கரவாதிகள்
ஆப்கானிஸ்தானில் உள்ள மிகப்பெரிய பயங்கரவாதக் குழு பாகிஸ்தானின் தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தான் அமைப்புதான் என ஐநா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் உள்ள பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் 6000-6500 பேரில் பெரும்பாலானோர் தெஹ்ரிக் அமைப்பை சேர்ந்தவர்கள். இந்த அமைப்பு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இரு நாடுகளுக்குமே அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.

ஆப்கனின் 12 மாகாணங்களில் அல்-கொய்தா இப்போதும் முனைப்புடன் செயல்படுகிறது. அதன் தலைவராக அய்மன் அல் ஜவாஹிரி உள்ளார். அல்கொய்தா பயங்கரவாதிகள் 400 முதல் 600 பேர் வரை ஆப்கனில் உள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories