ஆர்.எஸ்.எஸ். தலைவர் கொடியேற்ற தடை விதித்த மாவட்ட ஆட்சியர் இடமாற்றம்!

mohan bhawat flag hoisting - 2026

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில், சுதந்திர தினத்தன்று அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் கொடியேற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்துக்கு தடை விதித்த பாலக்காடு மாவட்ட ஆட்சியர் திடீரென இன்று இடமாற்றம் செய்யப் பட்டார். ஆட்சியர் இடமாற்றம் செய்ய்யப்பட்டது வழக்கமான நிர்வாக நடைமுறைதான் என்று முதல்வர் பிணரயி விஜயன் விளக்கம் அளித்துள்ளார்.

கேரள மாநிலம் பாலக்காடு நகரில் கர்ணகி அம்மன் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றுவார் என அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புகார்கள் எழுந்ததும், மாவட்ட ஆட்சியர் மேரிகுட்டி, அரசு உதவியுடன் இயங்கி வரும் பள்ளிக்கூடங்களில் தேசியக் கொடியை தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளோ அல்லது பள்ளியின் ஆசிரியர்களோதான் ஏற்ற முடியும் என குறிப்பாணை அனுப்பினார். பள்ளி நிர்வாகம் அதனைப் பெற்றுக் கொண்டது. இருப்பினும், கொடியேற்ற அமைக்கப்பட்ட கம்பத்திற்கு பதிலாக, வேறு ஒரு கம்பம் பள்ளி வளாகத்தில் நடப்பட்டு, அதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கொடியேற்றினார்.

ஆட்சியர் உத்தரவை மீறி பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் தேசியக் கொடியை ஏற்றியதால் சர்ச்சை எழுந்தது. ஆட்சியர் மேரிகுட்டி இந்த விவகாரம் குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யும்படி போலீசைக் கேட்டுக் கொள்வோம் என்றும் கூறியிருந்தார்.

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

இதனிடையே, பாலக்காடு மாவட்ட ஆட்சியராக இருந்த மேரிக்குட்டி இன்று இடமாற்றம் செய்யப்பட்டார். ஐஏஎஸ் அதிகாரியான மேரிக்குட்டிக்கு பஞ்சாயத்து இயக்குநராக பதவி வழங்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து முதல்வரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு முதல்வர் பினரயி விஜயன், ஆட்சியர் இடமாற்றம் என்பது, வழக்கமான நிர்வாக நடைமுறைதான் என்று தெரிவித்துள்ளார். சட்டப் பேரவையில் மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் குறித்து பதில் அளித்த போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories