ஆர்.எஸ்.எஸ். தலைவர் கொடியேற்ற தடை விதித்த மாவட்ட ஆட்சியர் இடமாற்றம்!

mohan bhawat flag hoisting - 2026

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில், சுதந்திர தினத்தன்று அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் கொடியேற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்துக்கு தடை விதித்த பாலக்காடு மாவட்ட ஆட்சியர் திடீரென இன்று இடமாற்றம் செய்யப் பட்டார். ஆட்சியர் இடமாற்றம் செய்ய்யப்பட்டது வழக்கமான நிர்வாக நடைமுறைதான் என்று முதல்வர் பிணரயி விஜயன் விளக்கம் அளித்துள்ளார்.

கேரள மாநிலம் பாலக்காடு நகரில் கர்ணகி அம்மன் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றுவார் என அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புகார்கள் எழுந்ததும், மாவட்ட ஆட்சியர் மேரிகுட்டி, அரசு உதவியுடன் இயங்கி வரும் பள்ளிக்கூடங்களில் தேசியக் கொடியை தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளோ அல்லது பள்ளியின் ஆசிரியர்களோதான் ஏற்ற முடியும் என குறிப்பாணை அனுப்பினார். பள்ளி நிர்வாகம் அதனைப் பெற்றுக் கொண்டது. இருப்பினும், கொடியேற்ற அமைக்கப்பட்ட கம்பத்திற்கு பதிலாக, வேறு ஒரு கம்பம் பள்ளி வளாகத்தில் நடப்பட்டு, அதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கொடியேற்றினார்.

ஆட்சியர் உத்தரவை மீறி பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் தேசியக் கொடியை ஏற்றியதால் சர்ச்சை எழுந்தது. ஆட்சியர் மேரிகுட்டி இந்த விவகாரம் குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யும்படி போலீசைக் கேட்டுக் கொள்வோம் என்றும் கூறியிருந்தார்.

இதனிடையே, பாலக்காடு மாவட்ட ஆட்சியராக இருந்த மேரிக்குட்டி இன்று இடமாற்றம் செய்யப்பட்டார். ஐஏஎஸ் அதிகாரியான மேரிக்குட்டிக்கு பஞ்சாயத்து இயக்குநராக பதவி வழங்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து முதல்வரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு முதல்வர் பினரயி விஜயன், ஆட்சியர் இடமாற்றம் என்பது, வழக்கமான நிர்வாக நடைமுறைதான் என்று தெரிவித்துள்ளார். சட்டப் பேரவையில் மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் குறித்து பதில் அளித்த போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Entertainment News

Popular Categories